நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் உயிர்ச் சேதங்கள் ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி, ஜனவரி 29
நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் உயிர்ச் சேதங்கள் ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உதகை ஏடிசி திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் பேருந்து கட்டண உயர்வைத் தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் உயிர்ச் சேதம் மற்றும் பயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உதகை, குன்னூர் ஆகிய நகரங்களில் வாகன பார்க்கிங் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் நிலவி வரும் ஆற்று மணல் தட்டுப்பாடு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் உயிர்ச் சேதங்கள் ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உதகை ஏடிசி திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் பேருந்து கட்டண உயர்வைத் தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் உயிர்ச் சேதம் மற்றும் பயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உதகை, குன்னூர் ஆகிய நகரங்களில் வாகன பார்க்கிங் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் நிலவி வரும் ஆற்று மணல் தட்டுப்பாடு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
