சாமானிய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜனவரி 29
சாமானிய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கானதாக இருக்கும் என நம்புகிறேன். இந்த பட்ஜெட் அனைத்து தரப்பினரின் விருப்பங்களையும், தேவைகளையும் பூர்த்தி செய்வதாக இருக்கும். அதிலும், சாமானிய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக இருக்கும்.
பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியமானது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்கப்பட்டு, அவர்கள் வழங்கிய பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு மிக கவனமாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீது உலகம் நம்பிக்கை கொண்டுள்ளது. உலக வங்கி, ஐஎம்எப் போன்ற அமைப்புக்களும் இந்தியாவின் கொள்கைகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளன.
கிராமப்புற இந்தியா, விவசாயிகள், தலித்துகள், பழங்குடியின மக்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலனை மனதில் கொண்டு பட்ஜெட் இடம்பெறும் சிறப்பு அம்சங்கள் குறித்து நாடாளுமன்ற குழுக்களுடன் விவாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சாமானிய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கானதாக இருக்கும் என நம்புகிறேன். இந்த பட்ஜெட் அனைத்து தரப்பினரின் விருப்பங்களையும், தேவைகளையும் பூர்த்தி செய்வதாக இருக்கும். அதிலும், சாமானிய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக இருக்கும்.
பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியமானது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்கப்பட்டு, அவர்கள் வழங்கிய பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு மிக கவனமாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீது உலகம் நம்பிக்கை கொண்டுள்ளது. உலக வங்கி, ஐஎம்எப் போன்ற அமைப்புக்களும் இந்தியாவின் கொள்கைகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளன.
கிராமப்புற இந்தியா, விவசாயிகள், தலித்துகள், பழங்குடியின மக்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலனை மனதில் கொண்டு பட்ஜெட் இடம்பெறும் சிறப்பு அம்சங்கள் குறித்து நாடாளுமன்ற குழுக்களுடன் விவாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.