உப்பிலிபாளையம் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை, ஜனவரி 28
உப்பிலிபாளையம் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்று காலை (ஜன. 28) உப்பிலிப்பாளையம் மேம்பாலத்திற்குக் கீழ் பகுதியில் முதியவரின் சடலம் ஒன்று இருப்பதாக ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஈரநெஞ்சம் அறக்கட்டளை உறுப்பினர்கள் காட்டூர் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல் துறையினர் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து, அறக்கட்டளை நிர்வாகிகள் உயிரிழந்தவரின் யார் என்றும், அவர் எப்படி அங்கு வந்தார் என்றும் தகவல் திரட்டும் முயற்சியை மேற்கொண்டு அவரது பெயர் சுப்பிரமணி என்றும் அவர் பொள்ளாச்சியை சேர்ந்தவர் என்றும் கண்டறிந்தது.
இதனைத்தொடர்ந்து, ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் வசிக்கும் அவரது மகன் சக்திவேல் என்பவருக்குத் தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டார்.
அதன் பிறகு காட்டூர் காவல் துறையினர் விசாரணைக்குப் பிறகு பிரேதத்தை சக்திவேலிடம் ஒப்படைத்தனர்.
உப்பிலிபாளையம் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்று காலை (ஜன. 28) உப்பிலிப்பாளையம் மேம்பாலத்திற்குக் கீழ் பகுதியில் முதியவரின் சடலம் ஒன்று இருப்பதாக ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஈரநெஞ்சம் அறக்கட்டளை உறுப்பினர்கள் காட்டூர் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல் துறையினர் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து, அறக்கட்டளை நிர்வாகிகள் உயிரிழந்தவரின் யார் என்றும், அவர் எப்படி அங்கு வந்தார் என்றும் தகவல் திரட்டும் முயற்சியை மேற்கொண்டு அவரது பெயர் சுப்பிரமணி என்றும் அவர் பொள்ளாச்சியை சேர்ந்தவர் என்றும் கண்டறிந்தது.
இதனைத்தொடர்ந்து, ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் வசிக்கும் அவரது மகன் சக்திவேல் என்பவருக்குத் தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டார்.
அதன் பிறகு காட்டூர் காவல் துறையினர் விசாரணைக்குப் பிறகு பிரேதத்தை சக்திவேலிடம் ஒப்படைத்தனர்.