நீலகிரி மாவட்டத்தில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
நீலகிரி, ஜனவரி 27
நீலகிரி மாவட்டத்தில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் இன்று உதகை மத்திய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, பேருந்து கட்டண உயர்வை எதிர்த்தும், மாநில அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தி.மு.க. மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷன், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் இன்று உதகை மத்திய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, பேருந்து கட்டண உயர்வை எதிர்த்தும், மாநில அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தி.மு.க. மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷன், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.