கோவையில் சோளத்தட்டை ஏற்றி வந்த லாரி தீயில் கருகி சேதமடைந்தது.
கோவை, ஜனவரி 26
கோவையில் சோளத்தட்டை ஏற்றி வந்த லாரி தீயில் கருகி சேதமடைந்தது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அடைக்கலம். இவர் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கால்நடைகள் தீவணமான சோளத்தட்டையை லாரியில் ஏற்றிக்கொண்டு கீரணத்தம் சாலையில் சென்றார்.
லாரியில் அதிக அளவில் சோளத்தட்டைகள் ஏற்றப்பட்டதால் அவை லாரியின் அளவை விட சற்று அதிக உயரத்திற்கு அடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சாலையில் இருந்த மின் கம்பியுடன் அவை உராய்ந்ததில் முழுவதுமாக தீப்பற்றியது.
இது குறித்து , அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் கணபதி தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த தீயணைப்பு படை வீரர்கள் ஐந்து பேர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்க முயற்சித்தனர்.
சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. ஆனால், லாரியின் பின் பகுதி மற்றும் டயர்கள் முற்றிலுமாக தீயில் கருகி சேதமடைந்தன.
கோவையில் சோளத்தட்டை ஏற்றி வந்த லாரி தீயில் கருகி சேதமடைந்தது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அடைக்கலம். இவர் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கால்நடைகள் தீவணமான சோளத்தட்டையை லாரியில் ஏற்றிக்கொண்டு கீரணத்தம் சாலையில் சென்றார்.
லாரியில் அதிக அளவில் சோளத்தட்டைகள் ஏற்றப்பட்டதால் அவை லாரியின் அளவை விட சற்று அதிக உயரத்திற்கு அடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சாலையில் இருந்த மின் கம்பியுடன் அவை உராய்ந்ததில் முழுவதுமாக தீப்பற்றியது.
இது குறித்து , அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் கணபதி தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த தீயணைப்பு படை வீரர்கள் ஐந்து பேர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்க முயற்சித்தனர்.
சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. ஆனால், லாரியின் பின் பகுதி மற்றும் டயர்கள் முற்றிலுமாக தீயில் கருகி சேதமடைந்தன.