திரைப்படப் பாணியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல ஆண்களை ஏமாற்றிய நடிகை ஸ்ருதி, இதுவரை ரூ.47 லட்சம் மோசடி செய்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை, ஜனவரி 26
திரைப்படப் பாணியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல ஆண்களை ஏமாற்றிய நடிகை ஸ்ருதி, இதுவரை ரூ.47 லட்சம் மோசடி செய்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த பாலமுருகன் (27) என்ற மென்பொருள் பொறியாளர் ஜெர்மனியில் பணியாற்றி வருகிறார். இணையதள திருமணம் பதிவு செய்து கொள்வதற்காக இணையத்தில் பதிவு செய்திருந்த அவரை கோவையைச் சேர்ந்த ஸ்ருதி (21) என்பவர் தொடர்பு கொண்டுள்ளார். அவர், தனது தந்தை துபாயில் தொழில் செய்து வருவதாகக் கூறி அறிமுகமாகி உள்ளார். அலைபேசியில் காதல் வளர்த்த பாலமுருகன் இந்தியா வந்த போது அவருடன் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். அப்போது, பல லட்சம் ரூபாயை பாலமுருகனிடம் பெற்றுக்கொண்ட ஸ்ருதி பின்னர் அவரிடம் தொடர்புகளை துண்டித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த பாலமுருகன், ஸ்ருதி மீது கோவை குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்திய போது ஸ்ருதியின் உண்மையான பெயர் மைதிலி என்பதும் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளதும் கண்டறிந்தனர். மேலும் இவர், போலியான குடும்ப உறுப்பினர்களைக் காட்டி இதேபோல பலரிடம் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து ஸ்ருதி, அவரது அம்மாவாக நடித்து வந்த சித்ரா (48), அப்பாவாக நடித்த பிரசன்ன வெங்கடேஷ் (38), சுபாஷ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்த போலீஸார் கோவை மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் கடந்த ஒருவாரமாக ஸ்ருதியிடம் விசாரணையை நடத்தினர். நேற்றுடன் (ஜன.,25) போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில், இதுவரை ரூ. 47 லட்சம் ஏமாற்றியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, நடிகை ஸ்ருதி மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை பிப்.,1-ம் தேதி வரை காவலில் வைக்கக் கோவை நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படப் பாணியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல ஆண்களை ஏமாற்றிய நடிகை ஸ்ருதி, இதுவரை ரூ.47 லட்சம் மோசடி செய்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த பாலமுருகன் (27) என்ற மென்பொருள் பொறியாளர் ஜெர்மனியில் பணியாற்றி வருகிறார். இணையதள திருமணம் பதிவு செய்து கொள்வதற்காக இணையத்தில் பதிவு செய்திருந்த அவரை கோவையைச் சேர்ந்த ஸ்ருதி (21) என்பவர் தொடர்பு கொண்டுள்ளார். அவர், தனது தந்தை துபாயில் தொழில் செய்து வருவதாகக் கூறி அறிமுகமாகி உள்ளார். அலைபேசியில் காதல் வளர்த்த பாலமுருகன் இந்தியா வந்த போது அவருடன் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். அப்போது, பல லட்சம் ரூபாயை பாலமுருகனிடம் பெற்றுக்கொண்ட ஸ்ருதி பின்னர் அவரிடம் தொடர்புகளை துண்டித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த பாலமுருகன், ஸ்ருதி மீது கோவை குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்திய போது ஸ்ருதியின் உண்மையான பெயர் மைதிலி என்பதும் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளதும் கண்டறிந்தனர். மேலும் இவர், போலியான குடும்ப உறுப்பினர்களைக் காட்டி இதேபோல பலரிடம் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து ஸ்ருதி, அவரது அம்மாவாக நடித்து வந்த சித்ரா (48), அப்பாவாக நடித்த பிரசன்ன வெங்கடேஷ் (38), சுபாஷ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்த போலீஸார் கோவை மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் கடந்த ஒருவாரமாக ஸ்ருதியிடம் விசாரணையை நடத்தினர். நேற்றுடன் (ஜன.,25) போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில், இதுவரை ரூ. 47 லட்சம் ஏமாற்றியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, நடிகை ஸ்ருதி மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை பிப்.,1-ம் தேதி வரை காவலில் வைக்கக் கோவை நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.