பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் உள்ள 3 புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் தற்காலிக பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, ஜனவரி 26
பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் உள்ள 3 புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் தற்காலிக பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது : கோவை மாவட்ட புள்ளியியல் துணை இயக்கநர் அலுவலகத்தில் புதியதாக 3 தற்காலிக புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் பதவி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடந்த ஆண்டு ஜுலை 1-ம் தேதி அன்று 35 வயதிற்கு மிகாமலும், ஏதாவது ஒரு பட்டம் மற்றும் கணிப்பொறியியல் சான்று பெற்றிருப்பவரும் அரசு நியமனத்தில் பின்பற்றப்படும் இனசுழற்சி முறையைப் பின்பற்றி பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் இருந்து வழங்கப்படும் கேள்வித்தாள் வைத்து தேர்வு நடத்தி நேர்காணல் வைத்து தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் தொகுப்பு ஊதியமாக ரூ.15,000 மட்டும் வழங்கப்படும். இதரபடிகள் ஏதும் வழங்கப்படமாட்டாது.
மேற்கண்ட தகுதிகளை உடைய தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து வரும் பிப்., 10-ம் தேதி மாலை 05. 45 மணி வரை புள்ளியியல் துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியர், அலுவலக வளாகம், பழைய கட்டிடம், முதல்தளம், கோவை 641018, தொலைப்பேசி எண் 0422 - 2309685 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்பிவைக்க வேண்டப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் உள்ள 3 புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் தற்காலிக பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது : கோவை மாவட்ட புள்ளியியல் துணை இயக்கநர் அலுவலகத்தில் புதியதாக 3 தற்காலிக புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் பதவி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடந்த ஆண்டு ஜுலை 1-ம் தேதி அன்று 35 வயதிற்கு மிகாமலும், ஏதாவது ஒரு பட்டம் மற்றும் கணிப்பொறியியல் சான்று பெற்றிருப்பவரும் அரசு நியமனத்தில் பின்பற்றப்படும் இனசுழற்சி முறையைப் பின்பற்றி பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் இருந்து வழங்கப்படும் கேள்வித்தாள் வைத்து தேர்வு நடத்தி நேர்காணல் வைத்து தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் தொகுப்பு ஊதியமாக ரூ.15,000 மட்டும் வழங்கப்படும். இதரபடிகள் ஏதும் வழங்கப்படமாட்டாது.
மேற்கண்ட தகுதிகளை உடைய தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து வரும் பிப்., 10-ம் தேதி மாலை 05. 45 மணி வரை புள்ளியியல் துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியர், அலுவலக வளாகம், பழைய கட்டிடம், முதல்தளம், கோவை 641018, தொலைப்பேசி எண் 0422 - 2309685 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்பிவைக்க வேண்டப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.