சிறுதுளி, ராக், யுனிவர்சல் பிரதர்வுட் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளான ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், ஐக்கிய ஜமாஅத், குருத்வாரா மற்றும் மடாலயங்களை ஒன்றிணைத்து டிஏஎஸ்கே செயல்பட்டு வருகிறது.
கோவை, ஜனவரி 26
சிறுதுளி, ராக், யுனிவர்சல் பிரதர்வுட் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளான ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், ஐக்கிய ஜமாஅத், குருத்வாரா மற்றும் மடாலயங்களை ஒன்றிணைத்து டிஏஎஸ்கே செயல்பட்டு வருகிறது.

இந்த டிஏஎஸ்கே அமைப்பு கரும்புக்கடை பகுதியில் உள்ள அண்ணா காலனி பகுதியில் மாநகராட்சி பள்ளியின் அருகே குப்பை மேடாக இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தினை மீட்டு சீரமைத்து முதலில் காய்கறிகள் தோட்டமாக அமைத்தது.

இதனைத் தொடர்ந்து இன்று (ஜனவரி 26) இந்த பூங்காவானது குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு போன்ற உபகரணங்கள் உள்ளடக்கிய சிறுவர் பூங்காவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறுவர் பூங்காவின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. பூங்காவினை கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் திறந்து வைத்து, தேசிய கொடியையும் ஏற்றினார்.

இந்நிகழ்வில், டிஏஎஸ்கே அமைப்பின் தலைவர் குர்தீப் சிங் ஆனந்த், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் செயலாளரும் டிஏஎஸ்கே ஒருங்கிணைப்பாளருமான அப்துல் ஹக்கீம், சிறுதுளி அமைப்பின் வனிதா மோகன், ராக் அமைப்பின் தலைவர் சி.ஆர். சுவாமிநாதன் மற்றும் செயலாளர் ரவீந்திரன், யுனிவர்சல் பிரதர்வுட் தலைவர் அட்வகேட் நந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சிறுதுளி, ராக், யுனிவர்சல் பிரதர்வுட் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளான ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், ஐக்கிய ஜமாஅத், குருத்வாரா மற்றும் மடாலயங்களை ஒன்றிணைத்து டிஏஎஸ்கே செயல்பட்டு வருகிறது.

இந்த டிஏஎஸ்கே அமைப்பு கரும்புக்கடை பகுதியில் உள்ள அண்ணா காலனி பகுதியில் மாநகராட்சி பள்ளியின் அருகே குப்பை மேடாக இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தினை மீட்டு சீரமைத்து முதலில் காய்கறிகள் தோட்டமாக அமைத்தது.

இதனைத் தொடர்ந்து இன்று (ஜனவரி 26) இந்த பூங்காவானது குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு போன்ற உபகரணங்கள் உள்ளடக்கிய சிறுவர் பூங்காவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறுவர் பூங்காவின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. பூங்காவினை கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் திறந்து வைத்து, தேசிய கொடியையும் ஏற்றினார்.

இந்நிகழ்வில், டிஏஎஸ்கே அமைப்பின் தலைவர் குர்தீப் சிங் ஆனந்த், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் செயலாளரும் டிஏஎஸ்கே ஒருங்கிணைப்பாளருமான அப்துல் ஹக்கீம், சிறுதுளி அமைப்பின் வனிதா மோகன், ராக் அமைப்பின் தலைவர் சி.ஆர். சுவாமிநாதன் மற்றும் செயலாளர் ரவீந்திரன், யுனிவர்சல் பிரதர்வுட் தலைவர் அட்வகேட் நந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.