பாரதியார் பல்கலைக் கழகத்தில் 69-வது குடியரசு தின விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக, துணை வேந்தர் ஆ. கணபதி தேசிய கொடியேற்றி குடியரசுத் தினவிழாவை துவக்கி வைத்தார்.
கோவை, ஜனவரி 26
பாரதியார் பல்கலைக் கழகத்தில் 69-வது குடியரசு தின விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக, துணை வேந்தர் ஆ. கணபதி தேசிய கொடியேற்றி குடியரசுத் தினவிழாவை துவக்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, பல்கலைக் கழக மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட துணைவேந்தர் குடியரசு தின சிறப்புகளை எடுத்துரைத்தார்.

மேலும், இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பல்கலைக் கழக வளாகத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது. தொடர்ந்து, மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இவ்விழாவில், பல்கலைக் கழக பதிவாளர் பா.வனிதா, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பாரதியார் பல்கலைக் கழகத்தில் 69-வது குடியரசு தின விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக, துணை வேந்தர் ஆ. கணபதி தேசிய கொடியேற்றி குடியரசுத் தினவிழாவை துவக்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, பல்கலைக் கழக மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட துணைவேந்தர் குடியரசு தின சிறப்புகளை எடுத்துரைத்தார்.

மேலும், இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பல்கலைக் கழக வளாகத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது. தொடர்ந்து, மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இவ்விழாவில், பல்கலைக் கழக பதிவாளர் பா.வனிதா, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
