உதகையில் நலத்திட்ட உதவிகளுடன் குடியரசு தின விழா கொண்டாட்டம்

இன்று 69-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டம், உதகையில் மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.



நீலகிரி, ஜனவரி 26

நாடு முழுவதும் இன்று குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் 69-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, தேசியக் கொடியேற்றி காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், 3 கோடியே 13 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு ஆட்சியர் வழங்கினார். மேலும், காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்குப் பதக்கங்கள், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் தோடர், கோத்தர், இருளர் ஆகியோர்களின் பாரம்பரிய இசையுடன் கூடிய நடன நிகழ்ச்சி சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் குடியரசு தினவிழா:-

நீலகிரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக திகழும் முதுமலை புலிகள் காப்பகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.



இந்நிகழ்ச்சியில், முதுமலை யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் அணி வகுத்து நிற்க, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தேசிய கொடியை ஏற்றினார்.

இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டு யானைகள் அணி வகுத்து நின்றதை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...