திருப்பூரில் 15 வது புத்தக திருவிழா தொடங்கியது

திருப்பூரில் 15 வது புத்தக திருவிழாவை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி துவக்கிவைத்தார். 60 திற்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் கலந்துகொண்ட இத்திருவிழாவில் 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் ஜனவரி 25

திருப்பூரில் 15 வது புத்தக திருவிழாவை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி துவக்கிவைத்தார். 60 திற்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் கலந்துகொண்ட  இத்திருவிழாவில் 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பூரில் ஆண்டு தோறும் பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 15 வது திருப்பூர் புத்தக திருவிழாவின் துவக்க விழா நடைபெற்றது.    

திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள பத்மினி கார்டனில் நடைபெற்ற துவக்க விழாவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார். 

பின்னர் புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார். பிப்ரவர் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த புத்தக திருவிழாவில் 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திருவிழாவில் பாரதி புத்தகாலயம், காலச்சுவடு பதிப்பகம், விஜயா பதிப்பகம், விகடன், சைவ சித்தாந்த பதிப்பகம் உள்ளிட்ட 60 திற்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் கலந்துகொண்டு தங்களது பதிப்பகங்களை காட்சிக்கு வைத்திருந்தனர். 

மேலும் கடந்தாண்டு சுமார் 60 ஆயிரம் பேர் பார்வையிட்டுதோடு ரூபாய் 1 கோடியே 25 லட்சம் புத்தகங்கள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த்தாண்டு 1 லட்சம் பாரையாளர்கள் வரக்கூடும் எனவும், ரூபாய் 1 கோடியே 50 லட்சம் வரை புத்தங்கள் விற்பனை ஆகக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக நிகழ்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

இந்நிகழ்சியில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் நடராஜ்,தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்ட ஏராளமான  பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...