திருப்பூரில் உரிய ஆவணங்களின்றியும் போலீ விசா மூலமும் தங்கியிருந்த 6 நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்களை போலிசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர் .
திருப்பூர் ஜனவரி 25
திருப்பூரில் உரிய ஆவணங்களின்றியும் போலீ விசா மூலமும் தங்கியிருந்த 6 நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்களை போலிசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை ஏற்றுமதி தொழில் பிரதானமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே வெளி நாடுகளில் இருந்து இங்கு வந்து தங்கி தொழிலில் வெளிநாடினர் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும் நைஜீரிய நாட்டை சேர்ந்த ஏராளமானவர்கள் திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் தொழில் செய்து வருகின்றனர். இவர்களில் பலரிடம் தொழில் முறையிலான விசா இல்லாமல்,காலாவதியான விசா சட்டவிரோதமாக தங்கி தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனிடையே திருப்பூர் கல்லூரி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வடக்கு போலீசார் அந்த வழியாக வந்த நைஜீரியர்களை நிறுத்தி விசாரித்ததில் அவர்களிடம் வாகனங்களுக்கான ஆவனங்களும் ஓட்டுநர் உரிமமும் இல்லை என தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடம் மேலும் விசாரித்த போது அவர்கள் காலவதியான விசா மற்றும் போலி விசாவை பயன்படுத்தி திருப்பூரில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஒகிடி மைக்கில் 28 , பியாடி எர்னஸ்ட் அவே 39., சன்டே மேத்யூ 38., கெனிட் ஒடிடிகா 41., ஒஹேமே சின்னோணி ஸ்பாலினஸ்25., ஸ்பாலினஸ் அபோஜி 38., என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து 6 பேரையும் கைது செய்த வடக்கு போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.