மக்களைப்பற்றி கவலை கொள்ளாமல் இருக்கும் வரை சுருட்டுவதிலேயே அதிமுக அரசு உள்ளது என கோவை விமானநிலையத் வந்த திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் பேட்டியளித்தார்.
கோவை, ஜனவரி 25
மக்களைப்பற்றி கவலை கொள்ளாமல் இருக்கும் வரை சுருட்டுவதிலேயே அதிமுக அரசு உள்ளது என கோவை விமானநிலையத் வந்த திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் பேட்டியளித்தார்.
கோவையில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் விமானம் மூலம் இன்று கோவை வந்தார். அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் அவர் கூறியதாவது-
காஞ்சி விஜயேந்திரருக்கு தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்க உடலில் வலுவும், உள்ளத்தில் உணர்ச்சியும் இருந்துள்ள போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது உள்ளத்திலும் உணர்விலும் வலு இல்லாமல் போனது தமிழுக்கு விஜயேந்திரர் கொடுக்கும் மரியாதை அவ்வளவுதான்.
உதயநிதி ஸ்டாலின் முழுமையாக அரசியலுக்கு வருவது பற்றி எனக்கு தெரியாது. சினிமாவை விட அரசியல் கவர்ச்சியாக இருப்பதால் நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வருகின்றனர். அவர்கள் அரசியலுக்கு வந்த பின்னர் அவர்களுக்கு இருக்கும் மரியாதையைத் தெரிந்து கொள்ள முடியும். இன்னும் அவர்கள் தெருவிற்கு வரவில்லை. அவர்கள் இன்னும் முழு அரசியல்வாதியாக உருவாகவில்லை.
மாணவர்கள், மக்கள், அரசியல் கட்சியினர் என பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக யார் போராடினாலும் அதை பற்றி கவலைப்படுவதாக இந்த அதிமுக அரசு இல்லை. முழுமையாக எவ்வளவு சுருட்டலாம் என்பதிலேயே கவனமாக இருக்கிறது, பாஜக ஒரு மாதிரியான கட்சி. அது செயல்படும் நிலையிலேயே இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்களைப்பற்றி கவலை கொள்ளாமல் இருக்கும் வரை சுருட்டுவதிலேயே அதிமுக அரசு உள்ளது என கோவை விமானநிலையத் வந்த திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் பேட்டியளித்தார்.
கோவையில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் விமானம் மூலம் இன்று கோவை வந்தார். அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் அவர் கூறியதாவது-
காஞ்சி விஜயேந்திரருக்கு தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்க உடலில் வலுவும், உள்ளத்தில் உணர்ச்சியும் இருந்துள்ள போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது உள்ளத்திலும் உணர்விலும் வலு இல்லாமல் போனது தமிழுக்கு விஜயேந்திரர் கொடுக்கும் மரியாதை அவ்வளவுதான்.
உதயநிதி ஸ்டாலின் முழுமையாக அரசியலுக்கு வருவது பற்றி எனக்கு தெரியாது. சினிமாவை விட அரசியல் கவர்ச்சியாக இருப்பதால் நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வருகின்றனர். அவர்கள் அரசியலுக்கு வந்த பின்னர் அவர்களுக்கு இருக்கும் மரியாதையைத் தெரிந்து கொள்ள முடியும். இன்னும் அவர்கள் தெருவிற்கு வரவில்லை. அவர்கள் இன்னும் முழு அரசியல்வாதியாக உருவாகவில்லை.
மாணவர்கள், மக்கள், அரசியல் கட்சியினர் என பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக யார் போராடினாலும் அதை பற்றி கவலைப்படுவதாக இந்த அதிமுக அரசு இல்லை. முழுமையாக எவ்வளவு சுருட்டலாம் என்பதிலேயே கவனமாக இருக்கிறது, பாஜக ஒரு மாதிரியான கட்சி. அது செயல்படும் நிலையிலேயே இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.