நீலகிரி, ஜனவரி 25
பசுந்தேயிலைக்கு ரூ.30 ஆதார விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வலியுறுத்தி உதகை அருகேயுள்ள எடக்காடு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட தேயிலை விவசாயிகள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்ட சிறு, குறு தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் ஜே.பி.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் எடக்காடு, சூண்டட்டி, நடுஹட்டி, முக்கிமலை, அட்டுபாயில், காயகண்டி, கவுண்டம்பாளையம், சிவசக்தி நகர், அரைஹட்டி, பாதகண்டி, தாவஹட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இதில், அடுத்த கட்டமாக கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்றும், வரும் பிப்ரவரி மாதம் உதகையில் பேரணி நடத்தவும் என்று துர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து ஜே.பி.சுப்ரமணியம் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் தற்போது ஒரு கிலோ தேயிலைக்கு ரூ.8 மட்டுமே கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் நஷ்டத்தில் தத்தளிக்கின்றனர். கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ள தேயிலை விவசாயிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்’ என்றார்.
பசுந்தேயிலைக்கு ரூ.30 ஆதார விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வலியுறுத்தி உதகை அருகேயுள்ள எடக்காடு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட தேயிலை விவசாயிகள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்ட சிறு, குறு தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் ஜே.பி.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் எடக்காடு, சூண்டட்டி, நடுஹட்டி, முக்கிமலை, அட்டுபாயில், காயகண்டி, கவுண்டம்பாளையம், சிவசக்தி நகர், அரைஹட்டி, பாதகண்டி, தாவஹட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இதில், அடுத்த கட்டமாக கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்றும், வரும் பிப்ரவரி மாதம் உதகையில் பேரணி நடத்தவும் என்று துர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து ஜே.பி.சுப்ரமணியம் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் தற்போது ஒரு கிலோ தேயிலைக்கு ரூ.8 மட்டுமே கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் நஷ்டத்தில் தத்தளிக்கின்றனர். கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ள தேயிலை விவசாயிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்’ என்றார்.