பிணத்திற்கு பணம் கேட்கும் அரசு மருத்துவமனை ஊழியர்கள்: உறவினர்களிடம் லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியானது

கோவை அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைப்பதற்காக லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

கோவை, ஜனவரி 25

கோவை அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைப்பதற்காக லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 

கோவை அரசு மருத்துவமனைக்கு தமிழகத்தின் மேற்குமண்டலத்தில் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலத்தை சேர்ந்த மக்களும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

நாள் ஒன்றிற்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இம்மருத்துவமனையால் பயன்பெற்று வருகின்றனர். 

விபத்து மற்றும் உடல் நலக்குறைவால் பலியாகும் நபர்களின் உடல்கள் உடற்கூறாய்விற்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

அவ்வாறு இறந்தவர்களின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு அம்மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் வந்துள்ளது

இந்த நிலையில், இம்மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் உறவினரிடம் சடலத்தை ஒப்படைப்பதற்காக ரூ.500 லஞ்சமாக கேட்ட வீடியோ வெளியாகியுள்ளது. 



சடலத்தை எடுத்துச் செல்வதற்கான சான்று வழங்குவதற்காக அந்த ஊழியர், இறந்தவரின் உறவினர்களிடம் லஞ்சம் கேட்டும் மிரட்டும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

நாள் ஒன்றுக்கு அம்மருத்துவமனையில் 5 முதல் 10 சடலங்கள் வரை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறாக அந்த அனைத்து சடலங்களையும் உறவினர்களிடையே ஒப்படைப்பதற்கு ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாகவும், இதற்கு மருத்துவமனை நிர்வாகமும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...