பிணத்திற்கு பணம் கேட்கும் அரசு மருத்துவமனை ஊழியர்கள்: உறவினர்களிடம் லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியானது

கோவை அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைப்பதற்காக லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

கோவை, ஜனவரி 25

கோவை அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைப்பதற்காக லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 

கோவை அரசு மருத்துவமனைக்கு தமிழகத்தின் மேற்குமண்டலத்தில் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலத்தை சேர்ந்த மக்களும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

நாள் ஒன்றிற்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இம்மருத்துவமனையால் பயன்பெற்று வருகின்றனர். 

விபத்து மற்றும் உடல் நலக்குறைவால் பலியாகும் நபர்களின் உடல்கள் உடற்கூறாய்விற்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

அவ்வாறு இறந்தவர்களின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு அம்மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் வந்துள்ளது

இந்த நிலையில், இம்மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் உறவினரிடம் சடலத்தை ஒப்படைப்பதற்காக ரூ.500 லஞ்சமாக கேட்ட வீடியோ வெளியாகியுள்ளது. 



சடலத்தை எடுத்துச் செல்வதற்கான சான்று வழங்குவதற்காக அந்த ஊழியர், இறந்தவரின் உறவினர்களிடம் லஞ்சம் கேட்டும் மிரட்டும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

நாள் ஒன்றுக்கு அம்மருத்துவமனையில் 5 முதல் 10 சடலங்கள் வரை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறாக அந்த அனைத்து சடலங்களையும் உறவினர்களிடையே ஒப்படைப்பதற்கு ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாகவும், இதற்கு மருத்துவமனை நிர்வாகமும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...