கோவை அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைப்பதற்காக லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
கோவை, ஜனவரி 25
கோவை அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைப்பதற்காக லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனைக்கு தமிழகத்தின் மேற்குமண்டலத்தில் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலத்தை சேர்ந்த மக்களும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
நாள் ஒன்றிற்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இம்மருத்துவமனையால் பயன்பெற்று வருகின்றனர்.
விபத்து மற்றும் உடல் நலக்குறைவால் பலியாகும் நபர்களின் உடல்கள் உடற்கூறாய்விற்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
அவ்வாறு இறந்தவர்களின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு அம்மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் வந்துள்ளது
இந்த நிலையில், இம்மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் உறவினரிடம் சடலத்தை ஒப்படைப்பதற்காக ரூ.500 லஞ்சமாக கேட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
சடலத்தை எடுத்துச் செல்வதற்கான சான்று வழங்குவதற்காக அந்த ஊழியர், இறந்தவரின் உறவினர்களிடம் லஞ்சம் கேட்டும் மிரட்டும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
நாள் ஒன்றுக்கு அம்மருத்துவமனையில் 5 முதல் 10 சடலங்கள் வரை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறாக அந்த அனைத்து சடலங்களையும் உறவினர்களிடையே ஒப்படைப்பதற்கு ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாகவும், இதற்கு மருத்துவமனை நிர்வாகமும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைப்பதற்காக லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனைக்கு தமிழகத்தின் மேற்குமண்டலத்தில் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலத்தை சேர்ந்த மக்களும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
நாள் ஒன்றிற்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இம்மருத்துவமனையால் பயன்பெற்று வருகின்றனர்.
விபத்து மற்றும் உடல் நலக்குறைவால் பலியாகும் நபர்களின் உடல்கள் உடற்கூறாய்விற்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
அவ்வாறு இறந்தவர்களின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு அம்மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் வந்துள்ளது
இந்த நிலையில், இம்மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் உறவினரிடம் சடலத்தை ஒப்படைப்பதற்காக ரூ.500 லஞ்சமாக கேட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
சடலத்தை எடுத்துச் செல்வதற்கான சான்று வழங்குவதற்காக அந்த ஊழியர், இறந்தவரின் உறவினர்களிடம் லஞ்சம் கேட்டும் மிரட்டும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
நாள் ஒன்றுக்கு அம்மருத்துவமனையில் 5 முதல் 10 சடலங்கள் வரை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறாக அந்த அனைத்து சடலங்களையும் உறவினர்களிடையே ஒப்படைப்பதற்கு ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாகவும், இதற்கு மருத்துவமனை நிர்வாகமும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.