எப்ஆர்டிஐ மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை, ஜனவரி 24
எப்ஆர்டிஐ மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கிகளில் மக்கள் வைப்புத்தொகையாக வைத்துள்ள சேமிப்பு (எப்ஆர்டிஐ) பணத்தை மத்திய அரசு வங்கிகளின் பங்குகளாக மாற்றும் மசோதாவை முன்மொழிந்துள்ளது. கார்ப்பரேட் மற்றும் பெருமுதலாளிகள் வங்கிகளில் பெற்ற வாராக்கடனை வசூலிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாமல், ஏழை, எளிய மக்களின் சேமிப்பு பணத்தை வேறு காரணங்களுக்கு அனுமதிக்கமாட்டோம் என வலியுறுத்தி இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை வெரைட்டிஹால் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி தலைமையகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிவானந்தம் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.