கோவையில் ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் பலி : மற்றொருவர் படுகாயம்

கோவையில் வேகமாக வந்த ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


கோவை, ஜனவரி 24 

கோவையில் வேகமாக வந்த ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரது மகன் சுதீஷ் குமார் (20). இவர், அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி முடிந்ததும் அப்பகுதியில் இருந்த ரயில் தண்டவாளத்தில் சுதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர் சதீஸ் என்பவரும் நடந்து சென்றனர். அப்போது, இருவரும் ரயில் வரும் போது செல்பி எடுக்க முயன்றனர். 

அப்போது, பெங்களூரில் இருந்து வந்த சரக்கு ரயில் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் ரயில் நிலைய காவலர்கள், இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சுதீஸ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சதீஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...