செல்பி மோகத்தால் உயிரை பணையம் வைத்த இளைஞர் : அதிர்ச்சி வீடியோ

சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுவதற்காகவும், அதிக லைக்குகள் கிடைக்க வேண்டும் என்ற மோகத்தில் இளைஞர்கள் பலர் அபாயகரமான வகையில் செல்பி எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை பேஷனாக வைத்துள்ளனர்.

ஜனவரி 24

சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுவதற்காகவும், அதிக லைக்குகள் கிடைக்க வேண்டும் என்ற மோகத்தில் இளைஞர்கள் பலர் அபாயகரமான வகையில் செல்பி எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை பேஷனாக வைத்துள்ளனர். 



ரயில் தண்டவாளத்தில் ஓடும் ரயில் முன் நின்று செல்பி எடுத்துக் கொள்வதற்காக பலர் காயமடைந்தும், உயிரை விட்டும் உள்ள சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளது. இந்நிலையில், ஐதராபாத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலுக்கு மிக அருகில் நின்று செல்பி எடுத்துள்ளார். இதில் ரயில் மோதியதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த இளைஞர் வெளியிட்ட செல்பி வீடியோ வைரலானதை அடுத்து அவர் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோன்று காஷ்மீரிலும் இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு இருப்பது போன்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தண்டவாளத்தின் நடுவே அவர் படுத்திருப்பதும், அவரின் மீது ரயில் வேகமாகக் கடந்து செல்வதாகவும் அந்த வீடியோ உள்ளது. சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காக நண்பர்களிடம் சொல்லி இதுபோன்ற அபாயகரமான வீடியோவை அந்த இளைஞர் எடுக்கச் சொல்லி இருப்பது தெரிய வந்துள்ளது. 

இது போன்ற முட்டாள் தனமான செயல்களுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

Newsletter

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...