கே.ஜி.குழுமத்தின் டவுன் சிட்டி டெவலப்பர்ஸ் நான்காவது அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் காளப்பட்டி அருகே நேரு நகரில் துவங்கியுள்ளது. இதற்கான முன்பதிவு குடியரசுத் தினமான வரும் 26-ம் தேதியன்று துவங்க உள்ளது.
கோவை, ஜனவரி 24
கே.ஜி.குழுமத்தின் டவுன் சிட்டி டெவலப்பர்ஸ் நான்காவது அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் காளப்பட்டி அருகே நேரு நகரில் துவங்கியுள்ளது. இதற்கான முன்பதிவு குடியரசுத் தினமான வரும் 26-ம் தேதியன்று துவங்க உள்ளது.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இதில் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் கிருத்திகா விக்ரம், சஞ்சய் விஜயகுமார் மற்றும் கண்ணையன் ஆகியோர் இத்திட்டம் குறித்து கூறியதாவது:-
கே.ஜி.குழுமம் 2012-ம் ஆண்டு முதல் கட்டுமான துறையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது நான்காவது அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் காளப்பட்டி அடுத்த நேரு நகரில் 136 ஏக்கர் பரப்பளவில் 136 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதில், 400 சதுர அடியில் ஒரு படுக்கை அறை கொண்ட குடியிருப்பு 15 லட்சம் முதல் துவங்குகிறது. 700 சதுர அடியில் இரண்டு படுக்கை அறை கொண்ட குடியிருப்பு 25 லட்சத்திற்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தரமான பொருட்கள் கொண்டு கட்டப்படும் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்து வசதிகளும் கொண்டதாக இருக்கும். இதற்கான முன்பதிவு அரசு கலைக் கல்லூரி எதிரில் உள்ள கே.ஜி.ஹவுஸில் வரும் 26-ம் தேதி குடியரசுத் தினத்தன்று காலை 8 மணியளவில் துவங்கி 28-ம் தேதி வரை நடைபெறும்.
இந்தத் திட்டத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு 50,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி அளிக்கப்படும். பிரதமரின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் மானியத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கே.ஜி.குழுமத்தின் டவுன் சிட்டி டெவலப்பர்ஸ் நான்காவது அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் காளப்பட்டி அருகே நேரு நகரில் துவங்கியுள்ளது. இதற்கான முன்பதிவு குடியரசுத் தினமான வரும் 26-ம் தேதியன்று துவங்க உள்ளது.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இதில் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் கிருத்திகா விக்ரம், சஞ்சய் விஜயகுமார் மற்றும் கண்ணையன் ஆகியோர் இத்திட்டம் குறித்து கூறியதாவது:-
கே.ஜி.குழுமம் 2012-ம் ஆண்டு முதல் கட்டுமான துறையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது நான்காவது அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் காளப்பட்டி அடுத்த நேரு நகரில் 136 ஏக்கர் பரப்பளவில் 136 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதில், 400 சதுர அடியில் ஒரு படுக்கை அறை கொண்ட குடியிருப்பு 15 லட்சம் முதல் துவங்குகிறது. 700 சதுர அடியில் இரண்டு படுக்கை அறை கொண்ட குடியிருப்பு 25 லட்சத்திற்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தரமான பொருட்கள் கொண்டு கட்டப்படும் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்து வசதிகளும் கொண்டதாக இருக்கும். இதற்கான முன்பதிவு அரசு கலைக் கல்லூரி எதிரில் உள்ள கே.ஜி.ஹவுஸில் வரும் 26-ம் தேதி குடியரசுத் தினத்தன்று காலை 8 மணியளவில் துவங்கி 28-ம் தேதி வரை நடைபெறும்.
இந்தத் திட்டத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு 50,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி அளிக்கப்படும். பிரதமரின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் மானியத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.