பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி : கட்டண நிர்ணய விவகாரங்களில் தலையிட முடியாது என்றும் கருத்து

அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது எனக் கூறி பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜனவரி 24

அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது எனக் கூறி பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வை அறிவித்தது. இந்தக் கட்டண உயர்வுக்கு தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மாநிலம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக வழக்கறிஞர் ஆர். சித்ரவேலு, வி. முனிகிருஷ்ணன் ஆகியோர் தனித்தனியாக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்களில், தமிழக அரசு பல்வேறு காரணங்களைக் கூறி அரசு பேருந்து கட்டணத்தை கடந்த 20-ந்தேதி முதல் திடீரென உயர்த்தியுள்ளது. இந்த திடீர் பேருந்து கட்டண உயர்வால், அரசு பேருந்துகளை மட்டுமே நம்பியுள்ள 80 சதவீதம் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில், இதுநாள் வரை மற்ற போக்குவரத்தைக் காட்டிலும், பேருந்து கட்டணம் மட்டும்தான் குறைவாக இருந்தது. ஆனால், இப்போது பேருந்து கட்டணம் தான் மற்ற போக்குவரத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

மேலும், கட்டண உயர்வுக்கு அரசு தற்போது கூறும் பல்வேறு காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. ஒரேநாள் இரவில் திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி முடிவு செய்து, மறுநாள் காலையில் அதிக பேருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் சொல்ல முடியாத துயரங்களை சந்தித்தனர். இதனால், அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் தங்களின் மாதாந்திர சம்பளத்தில் பெரும் தொகையைப் பேருந்து கட்டணத்திற்கு செலவிட நேரிடுகிறது.

ஏற்கனவே, பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு போன்றவற்றால் கடும் இன்னலுக்கு ஆளாகிவரும் பொதுமக்கள், தற்போது இந்தப் பேருந்து கட்டண உயர்வால் மேலும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இந்த திடீர் பேருந்து கட்டண உயர்வுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். பேருந்து கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது. கட்டண நிர்ணய விவகாரங்களில் தலையிட முடியாது என உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. பல பொருட்களின் விலை உயர்கிறது. ஒவ்வொன்றிலும் நீதிமன்றம் எப்படி தலையிடமுடியும். என்றார். ஆகவே, பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார். இதனிடையே, அனைத்து அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளில் கட்டண விவரத்தை ஒட்ட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...