குடியிருப்பு கட்டிடங்களுக்கு அனுமதி பெற்று அதை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது- நீலகிரி ஆட்சியர்

நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு அனுமதி பெற்று அதை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

நீலகிரி, ஜனவரி 24

நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு அனுமதி பெற்று அதை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 35 ஊராட்சிப் பகுதிகளிலும் அனுமதிக்கு மாறாகக் கட்டிடங்கள் பயன்படுத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. இதனை ஆய்வு செய்த களநிலை அலுவலர்கள், இந்தக் கட்டிடங்கள் முதலில் குடியிருப்பு கட்டிடங்களாக அனுமதி பெற்று, பிறகு வணிக ரீதியாக (ரிசார்ட்ஸ் உள்பட) பயன்படுத்தப்படுவது உறுதி செய்தனர்.

இந்தக் கட்டிடங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி கட்டிட விதிகள் 1997 மற்றும் மலைப்பிரதேச கட்டிட விதிகள் 1993-ன் கீழ் அங்கீகாரம் பெற தகுதி உள்ளவையாக இருப்பின் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மூலம் அங்கீகரித்து, அனுமதி வழங்கி, அரசுக்கான வருவாய் இழப்பைச் சரிக்கட்டும் நடவடிக்கை பரிசீலனையில் உள்ளது.

எனவே, அனுமதிக்கு மாறாக வியாபார நோக்கில் கட்டிடங்களை பயன்படுத்தி வரும் கட்டிட உரிமையாளர்கள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டிடக் கலை மற்றும் அழகுணர்வு காப்புக்குழு மற்றும் மலையிட காப்புக் குழுமம் அமைப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...