நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு அனுமதி பெற்று அதை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
நீலகிரி, ஜனவரி 24
நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு அனுமதி பெற்று அதை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 35 ஊராட்சிப் பகுதிகளிலும் அனுமதிக்கு மாறாகக் கட்டிடங்கள் பயன்படுத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. இதனை ஆய்வு செய்த களநிலை அலுவலர்கள், இந்தக் கட்டிடங்கள் முதலில் குடியிருப்பு கட்டிடங்களாக அனுமதி பெற்று, பிறகு வணிக ரீதியாக (ரிசார்ட்ஸ் உள்பட) பயன்படுத்தப்படுவது உறுதி செய்தனர்.
இந்தக் கட்டிடங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி கட்டிட விதிகள் 1997 மற்றும் மலைப்பிரதேச கட்டிட விதிகள் 1993-ன் கீழ் அங்கீகாரம் பெற தகுதி உள்ளவையாக இருப்பின் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மூலம் அங்கீகரித்து, அனுமதி வழங்கி, அரசுக்கான வருவாய் இழப்பைச் சரிக்கட்டும் நடவடிக்கை பரிசீலனையில் உள்ளது.
எனவே, அனுமதிக்கு மாறாக வியாபார நோக்கில் கட்டிடங்களை பயன்படுத்தி வரும் கட்டிட உரிமையாளர்கள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டிடக் கலை மற்றும் அழகுணர்வு காப்புக்குழு மற்றும் மலையிட காப்புக் குழுமம் அமைப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு அனுமதி பெற்று அதை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 35 ஊராட்சிப் பகுதிகளிலும் அனுமதிக்கு மாறாகக் கட்டிடங்கள் பயன்படுத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. இதனை ஆய்வு செய்த களநிலை அலுவலர்கள், இந்தக் கட்டிடங்கள் முதலில் குடியிருப்பு கட்டிடங்களாக அனுமதி பெற்று, பிறகு வணிக ரீதியாக (ரிசார்ட்ஸ் உள்பட) பயன்படுத்தப்படுவது உறுதி செய்தனர்.
இந்தக் கட்டிடங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி கட்டிட விதிகள் 1997 மற்றும் மலைப்பிரதேச கட்டிட விதிகள் 1993-ன் கீழ் அங்கீகாரம் பெற தகுதி உள்ளவையாக இருப்பின் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மூலம் அங்கீகரித்து, அனுமதி வழங்கி, அரசுக்கான வருவாய் இழப்பைச் சரிக்கட்டும் நடவடிக்கை பரிசீலனையில் உள்ளது.
எனவே, அனுமதிக்கு மாறாக வியாபார நோக்கில் கட்டிடங்களை பயன்படுத்தி வரும் கட்டிட உரிமையாளர்கள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டிடக் கலை மற்றும் அழகுணர்வு காப்புக்குழு மற்றும் மலையிட காப்புக் குழுமம் அமைப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.