குடியிருப்பு கட்டிடங்களுக்கு அனுமதி பெற்று அதை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது- நீலகிரி ஆட்சியர்

நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு அனுமதி பெற்று அதை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

நீலகிரி, ஜனவரி 24

நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு அனுமதி பெற்று அதை வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 35 ஊராட்சிப் பகுதிகளிலும் அனுமதிக்கு மாறாகக் கட்டிடங்கள் பயன்படுத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. இதனை ஆய்வு செய்த களநிலை அலுவலர்கள், இந்தக் கட்டிடங்கள் முதலில் குடியிருப்பு கட்டிடங்களாக அனுமதி பெற்று, பிறகு வணிக ரீதியாக (ரிசார்ட்ஸ் உள்பட) பயன்படுத்தப்படுவது உறுதி செய்தனர்.

இந்தக் கட்டிடங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி கட்டிட விதிகள் 1997 மற்றும் மலைப்பிரதேச கட்டிட விதிகள் 1993-ன் கீழ் அங்கீகாரம் பெற தகுதி உள்ளவையாக இருப்பின் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மூலம் அங்கீகரித்து, அனுமதி வழங்கி, அரசுக்கான வருவாய் இழப்பைச் சரிக்கட்டும் நடவடிக்கை பரிசீலனையில் உள்ளது.

எனவே, அனுமதிக்கு மாறாக வியாபார நோக்கில் கட்டிடங்களை பயன்படுத்தி வரும் கட்டிட உரிமையாளர்கள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டிடக் கலை மற்றும் அழகுணர்வு காப்புக்குழு மற்றும் மலையிட காப்புக் குழுமம் அமைப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...