பொதுவிநியோகத் திட்டத்தில் உள்ள நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக, கோவையில் கிராம ஊராட்சிகளில் உள்ள ரேஷன் கடைகளின் கணக்குகளை சமூக தணிக்கை செய்ய இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை, ஜனவரி 23
பொதுவிநியோகத் திட்டத்தில் உள்ள நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக, கோவையில் கிராம ஊராட்சிகளில் உள்ள ரேஷன் கடைகளின் கணக்குகளை சமூக தணிக்கை செய்ய இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் குடியரசு தினத்தன்று (ஜன.,26) நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டத்தில் தொடர்புடைய ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட ரேஷன் கடைகளின் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் குறித்த அனைத்துவித கணக்குகள் சமூகத் தணிக்கைக்கு முன்னிலைப்படுத்தப்பட உள்ளன. பொதுவிநியோகத் திட்டத்தின் செயல்பாட்டிலும், ரேஷன்கடைகளின் செயல்பாட்டிலும் வெளிப்படையான நடைமுறையைக் கொண்டு வரும் வகையில் செயல்படுத்தப்படும் சமூகத் தணிக்கையினால் பொதுமக்களின் குறைகள் பதியப்பட்டு குறைகள் களைந்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, பொதுமக்கள் பெருந்திரளாக மேற்படி சமூகத் தணிக்கையில் கலந்து கொண்டு பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெற்றிடுமாறும், மேலும் இத்திட்டம் சிறந்த முறையில் செயல்பட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
பொதுவிநியோகத் திட்டத்தில் உள்ள நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக, கோவையில் கிராம ஊராட்சிகளில் உள்ள ரேஷன் கடைகளின் கணக்குகளை சமூக தணிக்கை செய்ய இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் குடியரசு தினத்தன்று (ஜன.,26) நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டத்தில் தொடர்புடைய ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட ரேஷன் கடைகளின் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் குறித்த அனைத்துவித கணக்குகள் சமூகத் தணிக்கைக்கு முன்னிலைப்படுத்தப்பட உள்ளன. பொதுவிநியோகத் திட்டத்தின் செயல்பாட்டிலும், ரேஷன்கடைகளின் செயல்பாட்டிலும் வெளிப்படையான நடைமுறையைக் கொண்டு வரும் வகையில் செயல்படுத்தப்படும் சமூகத் தணிக்கையினால் பொதுமக்களின் குறைகள் பதியப்பட்டு குறைகள் களைந்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, பொதுமக்கள் பெருந்திரளாக மேற்படி சமூகத் தணிக்கையில் கலந்து கொண்டு பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெற்றிடுமாறும், மேலும் இத்திட்டம் சிறந்த முறையில் செயல்பட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.