கிராமசபைக் கூட்டத்தில் ரேஷன் கடைகளின் கணக்குகள் சமூக தணிக்கை

பொதுவிநியோகத் திட்டத்தில் உள்ள நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக, கோவையில் கிராம ஊராட்சிகளில் உள்ள ரேஷன் கடைகளின் கணக்குகளை சமூக தணிக்கை செய்ய இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை, ஜனவரி 23

பொதுவிநியோகத் திட்டத்தில் உள்ள நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக, கோவையில் கிராம ஊராட்சிகளில் உள்ள ரேஷன் கடைகளின் கணக்குகளை சமூக தணிக்கை செய்ய இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கோவை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் குடியரசு தினத்தன்று (ஜன.,26) நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டத்தில் தொடர்புடைய ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட ரேஷன் கடைகளின் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் குறித்த அனைத்துவித கணக்குகள் சமூகத் தணிக்கைக்கு முன்னிலைப்படுத்தப்பட உள்ளன. பொதுவிநியோகத் திட்டத்தின் செயல்பாட்டிலும், ரேஷன்கடைகளின் செயல்பாட்டிலும் வெளிப்படையான நடைமுறையைக் கொண்டு வரும் வகையில் செயல்படுத்தப்படும் சமூகத் தணிக்கையினால் பொதுமக்களின் குறைகள் பதியப்பட்டு குறைகள் களைந்திட நடவடிக்கை எடுக்கப்படும். 

எனவே, பொதுமக்கள் பெருந்திரளாக மேற்படி சமூகத் தணிக்கையில் கலந்து கொண்டு பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெற்றிடுமாறும், மேலும் இத்திட்டம் சிறந்த முறையில் செயல்பட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...