தனது அரசியல் பயணம் தொடர்பாக நடிகர் கமலஹாசன், 2-வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளும் ஆலோசனை நடத்தினார்.
ஜனவரி 23
தனது அரசியல் பயணம் தொடர்பாக நடிகர் கமலஹாசன், 2-வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளும் ஆலோசனை நடத்தினார்.
நடிகர் கமல் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்த நிலையில், வரும் பிப்ரவரி 21 ஆம் தேதியன்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் வீட்டிலிருந்து தனது அரசியல் பிரவேசத்தை துவங்க உள்ளதாகவும், அன்றே கட்சியின் பெயரையும் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் கமல் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, சென்னை மாவட்டங்களில் உள்ள நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, இன்று இரண்டாவது நாளாக 27 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அந்தந்த மாவட்டங்களில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கமலஹாசன் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த ஆலோசனையின் போது, தனது சுற்றுப்பயண விவரங்கள் தொடர்பாக திட்டம் வகுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இவ்வாறு அரசியலில் தீவிரம் காட்டும் நடிகர் கமலஹாசன், தமிழக அரசியலில் புதிய மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர்.
தனது அரசியல் பயணம் தொடர்பாக நடிகர் கமலஹாசன், 2-வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளும் ஆலோசனை நடத்தினார்.
நடிகர் கமல் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்த நிலையில், வரும் பிப்ரவரி 21 ஆம் தேதியன்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் வீட்டிலிருந்து தனது அரசியல் பிரவேசத்தை துவங்க உள்ளதாகவும், அன்றே கட்சியின் பெயரையும் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் கமல் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, சென்னை மாவட்டங்களில் உள்ள நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, இன்று இரண்டாவது நாளாக 27 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அந்தந்த மாவட்டங்களில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கமலஹாசன் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த ஆலோசனையின் போது, தனது சுற்றுப்பயண விவரங்கள் தொடர்பாக திட்டம் வகுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இவ்வாறு அரசியலில் தீவிரம் காட்டும் நடிகர் கமலஹாசன், தமிழக அரசியலில் புதிய மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர்.