அரசியலில் தீவிரம் காட்டும் கமல் : 2-வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை

தனது அரசியல் பயணம் தொடர்பாக நடிகர் கமலஹாசன், 2-வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளும் ஆலோசனை நடத்தினார்.

ஜனவரி 23

தனது அரசியல் பயணம் தொடர்பாக நடிகர் கமலஹாசன், 2-வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளும் ஆலோசனை நடத்தினார். 

நடிகர் கமல் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்த நிலையில், வரும் பிப்ரவரி 21 ஆம் தேதியன்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் வீட்டிலிருந்து தனது அரசியல் பிரவேசத்தை துவங்க உள்ளதாகவும், அன்றே கட்சியின் பெயரையும் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் கமல் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, சென்னை மாவட்டங்களில் உள்ள நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, இன்று இரண்டாவது நாளாக 27 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அந்தந்த மாவட்டங்களில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கமலஹாசன் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த ஆலோசனையின் போது, தனது சுற்றுப்பயண விவரங்கள் தொடர்பாக திட்டம் வகுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இவ்வாறு அரசியலில் தீவிரம் காட்டும் நடிகர் கமலஹாசன், தமிழக அரசியலில் புதிய மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். 

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...