அரசியல் கட்சிகளுக்கு ரூ. 2 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாக நன்கொடை வழங்க தடை

அரசியல் கட்சிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக நன்கொடை வழங்க கூடாது என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

ஜனவரி 23

அரசியல் கட்சிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக நன்கொடை வழங்க கூடாது என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

தேர்தலின் போது அரசியல் கட்சிகள் சட்ட விரோதமான பணபரிமாற்றம் செய்வதை தடுக்கும் வகையில், வருமான வரித்துறையினர் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக 'தேர்தல் நிதிப் பத்திரங்கள்' திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 

இத்திட்டத்தின்படி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் தொழில் நிறுவனங்களும், தனிநபர்களும் குறிப்பிட்ட சில பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் கிடைக்கும் தேர்தல் நன்கொடைக்கான நிதிப் பத்திரங்களை வாங்கி, அதன் மூலம் வங்கிகள் வழியாக, வெளிப்படையாக நன்கொடை அளிக்க முடியும். பத்திரத்தில் என்ன தொகை குறிப்பிடப்படுகிறதோ, அந்த தொகை குறிப்பிட்ட அரசியல் கட்சியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக நன்கொடை அளிப்பதை தவிர்க்க இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய 4 மாதங்களில் தலா 10 நாள்களுக்கு மட்டுமே இந்தப் பத்திரங்கள் கிடைக்கும். இந்நிலையில், இத்திட்டத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, அரசியல் கட்சிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக நன்கொடை வழங்க கூடாது என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...