நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 122-வது பிறந்த நாளையொட்டி, நீலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
நீலகிரி, ஜனவரி 23
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 122-வது பிறந்த நாளையொட்டி, நீலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
நாடு முழுவதும் சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் 122-வது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகையில் நேதாஜியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில், நேதாஜியின் பேத்தி மாதுரி போஸ், அவரது கணவருடன் கலந்துகொண்டு மலர்தூவி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட சமயத்தில் சுபாஷ் சந்திரபோஸ் பேருரையாற்றிய இடமான சுபாஷ் சந்திரபோஸ் திடலில் நடந்த இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உட்பட பல்வேறு அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 122-வது பிறந்த நாளையொட்டி, நீலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
நாடு முழுவதும் சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் 122-வது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகையில் நேதாஜியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில், நேதாஜியின் பேத்தி மாதுரி போஸ், அவரது கணவருடன் கலந்துகொண்டு மலர்தூவி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட சமயத்தில் சுபாஷ் சந்திரபோஸ் பேருரையாற்றிய இடமான சுபாஷ் சந்திரபோஸ் திடலில் நடந்த இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உட்பட பல்வேறு அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.