கோவையில் பேருந்திலிருந்து தவறி விழுந்த விபத்தில் கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோவை, ஜனவரி 22
கோவையில் பேருந்திலிருந்து தவறி விழுந்த விபத்தில் கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோவை பழினிகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் கீர்த்தனா (19). இவர் அவினாசி சாலையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இன்று காலை கல்லூரிக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்தில் கூட்ட நெரிசலாக இருந்ததால் படியில் நின்று கொண்டிருந்தார்.
பேருந்து வடமதுரை-தடாகம் சாலையில் சென்ற போது நிலை தடுமாறிய கீர்த்தனா கீழே விழுந்தார். இதில் பேருந்தின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் பேருந்திலிருந்து தவறி விழுந்த விபத்தில் கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோவை பழினிகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் கீர்த்தனா (19). இவர் அவினாசி சாலையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இன்று காலை கல்லூரிக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்தில் கூட்ட நெரிசலாக இருந்ததால் படியில் நின்று கொண்டிருந்தார்.
பேருந்து வடமதுரை-தடாகம் சாலையில் சென்ற போது நிலை தடுமாறிய கீர்த்தனா கீழே விழுந்தார். இதில் பேருந்தின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.