நீலகிரியில் இருந்து கோவை வருவதற்கான பேருந்துக் கட்டணம் ரூ. 85 ஆக உயர்வு: பொதுமக்கள் வேதனை

நீலகிரி மாவட்டத்தில் இருந்து அண்டை மாவட்டமான கோவைக்கு வருவதற்கான பேருந்துக் கட்டணம் ரூ. 85 ஆக உயர்ந்திருப்பதால், பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நீலகிரி, ஜனவரி 20

நீலகிரி மாவட்டத்தில் இருந்து அண்டை மாவட்டமான கோவைக்கு வருவதற்கான பேருந்துக் கட்டணம் ரூ. 85 ஆக உயர்ந்திருப்பதால், பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு நேற்று முன்தினம் திடீரென பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. இதனால், பேருந்து கட்டணம் 100 சதவீதம் உயர்ந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.5-லிருந்து ரூ.9 ஆக உயர்ந்துள்ளது. நீலகிரி மாவட்ட மக்கள் அலுவல், கல்வி, மருத்துவம் காரணமாக மக்கள் அருகில் உள்ள கோவை மாவட்டத்துக்கு தான் வர வேண்டும். உதகையிலிருந்து கோவைக்கு ரூ.53-லிருந்து கட்டணம் ரூ.85 ஆக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



இது தொடர்பாக, சிஐடியு மாவட்ட செயலாளர் ஜெ.ஆல்துரை கூறும்போது, ‘கட்டண உயர்வு ஆண்டுக்கு ஒருமுறை சிறிது சிறிதாக ஏற்றியிருக்கலாம். ஆனால், தற்போது 100 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது, மக்கள் மீது அரசு சுமை ஏற்றியுள்ளது. குக்கிராமங்களில் உள்ள தோட்ட தொழிலாளர்கள், பழங்குடியின மக்கள், கூலி தொழிலாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். நீலகிரி மாவட்டத்தில் தனியார் போக்குவரத்தை ஊக்கவிக்கவே கட்டண உயர்வு வழி வகுக்கும். இதைக் கண்டித்து வரும் 25-ம் தேதி மறியல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: நீலகிரி மாவட்டம் தேயிலை, காய்கறி விவசாயமே பிரதான தொழில். தோட்ட தொழிலாளர்கள் தான் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் வேலை தேடி அண்டை மாநிலங்களுக்கும் செல்கின்றனர். தற்போது, பேருந்து கட்டணத்துக்கே பாதி வருவாய் சென்றுவிடும். போக்குவரத்து அமைச்சர் போக்குவரத்து துறையை சேவை துறையாக கொண்டுவர தனி தீர்மானம் கொண்டுவர வேண்டும். உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்றார்.

இந்தப் பேருந்து கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சாதாரண பேருந்துகளில் கூட விரைவுப் பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணம் பெறப்படுவதால், பொதுநல வழக்கு தொடர நுகர்வோர்மன்றம் முடிவு செய்துள்ளது.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...