நீலகிரியில் இருந்து கோவை வருவதற்கான பேருந்துக் கட்டணம் ரூ. 85 ஆக உயர்வு: பொதுமக்கள் வேதனை

நீலகிரி மாவட்டத்தில் இருந்து அண்டை மாவட்டமான கோவைக்கு வருவதற்கான பேருந்துக் கட்டணம் ரூ. 85 ஆக உயர்ந்திருப்பதால், பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நீலகிரி, ஜனவரி 20

நீலகிரி மாவட்டத்தில் இருந்து அண்டை மாவட்டமான கோவைக்கு வருவதற்கான பேருந்துக் கட்டணம் ரூ. 85 ஆக உயர்ந்திருப்பதால், பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு நேற்று முன்தினம் திடீரென பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. இதனால், பேருந்து கட்டணம் 100 சதவீதம் உயர்ந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.5-லிருந்து ரூ.9 ஆக உயர்ந்துள்ளது. நீலகிரி மாவட்ட மக்கள் அலுவல், கல்வி, மருத்துவம் காரணமாக மக்கள் அருகில் உள்ள கோவை மாவட்டத்துக்கு தான் வர வேண்டும். உதகையிலிருந்து கோவைக்கு ரூ.53-லிருந்து கட்டணம் ரூ.85 ஆக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



இது தொடர்பாக, சிஐடியு மாவட்ட செயலாளர் ஜெ.ஆல்துரை கூறும்போது, ‘கட்டண உயர்வு ஆண்டுக்கு ஒருமுறை சிறிது சிறிதாக ஏற்றியிருக்கலாம். ஆனால், தற்போது 100 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது, மக்கள் மீது அரசு சுமை ஏற்றியுள்ளது. குக்கிராமங்களில் உள்ள தோட்ட தொழிலாளர்கள், பழங்குடியின மக்கள், கூலி தொழிலாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். நீலகிரி மாவட்டத்தில் தனியார் போக்குவரத்தை ஊக்கவிக்கவே கட்டண உயர்வு வழி வகுக்கும். இதைக் கண்டித்து வரும் 25-ம் தேதி மறியல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: நீலகிரி மாவட்டம் தேயிலை, காய்கறி விவசாயமே பிரதான தொழில். தோட்ட தொழிலாளர்கள் தான் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் வேலை தேடி அண்டை மாநிலங்களுக்கும் செல்கின்றனர். தற்போது, பேருந்து கட்டணத்துக்கே பாதி வருவாய் சென்றுவிடும். போக்குவரத்து அமைச்சர் போக்குவரத்து துறையை சேவை துறையாக கொண்டுவர தனி தீர்மானம் கொண்டுவர வேண்டும். உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்றார்.

இந்தப் பேருந்து கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சாதாரண பேருந்துகளில் கூட விரைவுப் பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணம் பெறப்படுவதால், பொதுநல வழக்கு தொடர நுகர்வோர்மன்றம் முடிவு செய்துள்ளது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...