பேருந்து கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசு மீது பொதுமக்கள் அதிருப்தி

பேருந்து கட்டணத்தை உயர்த்தியிருப்பது பகல் கொள்ளை எனக் கூறிய பொதுமக்கள் , தமிழக அரசின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்தனர்.

கோவை, ஜனவரி 20

பேருந்து கட்டணத்தை உயர்த்தியிருப்பது பகல் கொள்ளை எனக் கூறிய பொதுமக்கள் , தமிழக அரசின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்தனர். 

தமிழக அரசு நேற்று அதிரடியாக பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளது. சாதாரண கட்டணமாக இருந்த ரூ. 3-ல் இருந்து ரூ. 5 ஆகவும், ரூ. 9-லிருந்து ரூ.17 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வெளியூர் செல்லும் பேருந்து, சொகுசு பேருந்து கட்டணங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகளிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 

கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் கூறுகையில், தமிழக அரசின் இந்தக் கட்டண உயர்வு பகல் கொள்ளை. மக்கள் விரோதசெயல். தமிழக அரசு 20% தான் கட்டணத்தை உயர்த்தியதாகக் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது. 80% கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது, எனக் கூறினர். 

பேருந்து பயணி கோபால் என்பவர் கூறும்போது :- சேலம் செல்ல ரூ. 100 முதல் ரூ. 120 வரை இருந்த பேருந்து கட்டணம் தற்போது ரூ. 200-ல் இருந்து ரூ. 220 வரை உயர்ந்துள்ளது. போக்குவரத்து துறை ஊழியர்களின் பணத்தை வேறு காரணங்களுக்காக செலவு செய்துவிட்டு, அதனை ஈடுசெய்ய இந்த உயர்வை அமல்படுத்தி உள்ளது. இது பகல் கொள்ளை. சாதாரண கட்டணம் என நினைத்து பேருந்தில் ஏறிய பயணிகள் சிலர் பயணம் மேற்கொள்ள முடியாமல் திரும்பினர். இவ்வாறு தெரிவித்தார். 

கமலா என்ற பெண்மணி கூறும்போது, தனக்கு 3 குழந்தைகள் உள்ளது. தன்னுடைய மாத சம்பளமே ரூ.4,000-ம் தான். குழந்தைகள் கல்வி செலவு குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாத நிலை உள்ளபோது இந்தப் பேருந்து கட்டணம் பேரிடியை ஏற்படுத்தி உள்ளது, என்றார்.

மென் பொறியாளர் பிரனேஷ் கூறுகையில், இந்தக் கட்டண உயர்வு என்பது அனைவருக்கும் பொருந்தும். ஏற்கனவே, ஜி.எஸ்.டி.யில் இருந்து மக்கள் மீளாத நிலையில், இந்தப் பேருந்து கட்டண உயர்வு மக்களை மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேருந்து கட்டண உயர்வை வாபஸ் பெறாவிட்டால் மக்கள் இந்த ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்பும் தூரம் வெகுதொலைவில் இல்லை. இந்தப் பேருந்து கட்டண உயர்வு பொது மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...