அரசு பேருந்து கட்டணம் உயர்வை திரும்பப் பெற முடியாது: போக்குவரத்து துறை அமைச்சர்

தமிழக அரசு அறிவித்துள்ள அதிரடி பேருந்து கட்டண உயர்விற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

ஜனவரி 20

தமிழக அரசு அறிவித்துள்ள அதிரடி பேருந்து கட்டண உயர்விற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நிதிச்சுமை காரணமாகவே பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவாகவே உள்ளது. 2000 ம் ஆண்டிற்கு பிறகு ஆந்திராவில் 16 முறையும், கேரளா மற்றும் கர்நாடகாவில் 6 முறையும் பேருந்துகட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் 2 முறை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. நவீன வசதியுடன் கூடிய பேருந்துகளை இயக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

கட்டணத்தை உயர்த்தியும் போக்குவரத்து துறைக்கு ஆண்டுக்கு ரூ.900 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் 200 மின்சார பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட எந்த தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. போக்குவரத்து துறைக்கு ரூ.1 வரவு வந்தால் ரூ.1.42 கோடி செலவு ஏற்படுகிறது. சுங்க கட்டணம் உள்ளிட்டவற்றால் ரூ.417 கோடி செலவு ஏற்படுகிறது. இதனால் டிக்கெட் கட்டணம் ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. 

போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப்படாது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அதிகப்படியாக ரூ.1,000 கோடி அளவிற்கு ஊதிய உயர்வு அளித்துள்ளோம். பேருந்துகட்டண உயர்வு தொடர்பான அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துக்கள் பரிசீலிக்கப்படும். எனினும் தற்போதைய நிலையில் பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது. பல்வேறு காரணங்களால் போக்குவரத்து துறையின் நிதிச்சுமை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...