கோவை சங்கனூர் ஓடையில் டயர் மற்றும் கழிவுப்பொருட்கள் எரிந்ததை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

கோவை சங்கனூர் ஓடையில் டயர் மற்றும் கழிவுப்பொருட்கள் எரிந்ததை, அணைத்த தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

கோவை, ஜனவரி 19

கோவை சங்கனூர் ஓடையில் டயர் மற்றும் கழிவுப்பொருட்கள்  எரிந்ததை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். 

சிவானந்தகாலனி பகுதியிலிருந்து சங்கனூர் செல்லும் வழியிலுள்ள ஓடையில் , டயர் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.  இந்நிலையில் இன்று(19.01.2018) மாலை கழிவுகளில் தீ பிடித்து எரிந்துள்ளது. அதில் இருந்து வந்த நச்சுப்புகை அப்பகுதி முழுவதும் பரவியதை அடுத்து , மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் வந்து  தீயை அணைத்தனர். 

இந்த பகுதியில் தொடர்ச்சியாக குப்பைகள் கொட்டப்பட்ட போதும் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதால் ஓடை மறிக்கப்பட்டு கழிவு நீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குப்பைகள் கொட்டப்படுவது தடுக்கப்படும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர். 

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...