​பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்வு!

தமிழகத்தில் தற்போது 6 ஆண்டுகளுக்கு பின்னர் அரசுப் பேருந்துகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம், நாளை (ஜனவரி 20) முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கோவை, ஜனவரி 19

தமிழகத்தில் தற்போது  6 ஆண்டுகளுக்கு பின்னர் அரசுப் பேருந்துகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம், நாளை (ஜனவரி 20) முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் இந்த கட்டண உயர்வு தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவித்துள்ளபடி கட்டண விபரம்:-

புறநகர் பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் ரூ.5-லிருந்து ரூ.6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மாநகர குளிர்சாதன பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

புறநகர் விரைவுப்பேருந்தில் அதிகபட்ச கட்டணம் ரூ.17-லிருந்து ரூ.24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வால்வோ பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.33லிருந்து ரூ.51 ஆகவும், மாநகர, நகர பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் ரூ.3லிருந்து ரூ.5 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

குளிர்சாதனப் பேருந்துகளுக்கான கட்டணம் 30 கி.மீ-க்கு ரூ.27லிருந்து ரூ.42 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது உயர்த்தப்பட்டுள்ள கட்டணத்துடன் மலைப்பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுக்கு மட்டும் 20 சதவிகிதம் கூடுதலாக வசூலிக்கப்படும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிகைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களது கோரிக்கைகள் சிலவற்றை தமிழக அரசு நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...