அரசு அறிவித்த ஊதியம் வழங்கக் கோரி விசைத்தறி உரிமையாளர்கள் வருவாய் அதிகாரியிடம் மனு

தமிழக அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வை அமல்படுத்தாததால் வாங்கிய கடனை திரும்பிச் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும், விசைத்தறியாளர்களின் கடனைத் தள்ளுபடி செய்யக்கோரியும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் இன்று மனு அளித்தனர்.

கோவை, ஜனவரி 19

தமிழக அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வை அமல்படுத்தாததால் வாங்கிய கடனை திரும்பிச் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும், விசைத்தறியாளர்களின் கடனைத் தள்ளுபடி செய்யக்கோரியும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் இன்று மனு அளித்தனர்.



திருப்பூர், கோவை மாவட்டத்தில் 35,000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. அதில் 90 சதவிகிதம் பேர் கூலியின் அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு 27 சதவிகிதம் மற்றும் 31 சதவிகிதம் கூலி உயர்வு வழங்க ஆணையிட்டது.

இருப்பினும் தற்போது வரை ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியை உயர்த்தி வழங்கவில்லை என விசைத்தறி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அரசு அறிவித்த ஊதிய உயர்வை வழங்காததால் 3000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த 3000 விசைத்தறி கூடங்கள் தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும், தங்களது குழந்தைக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமலும் வறுமையில் சிக்கியுள்ளது.

இதனால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 300 கோடிக்கு மேலான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சார்பாக கோவை மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...