ஒரு பள்ளிக்கு இரண்டே ஆசிரியர்கள் : மாணவர்களின் கல்வியை கேள்விக்குறியாக்கும் மாநகராட்சி நிர்வாகம்

கோவையில் 98 மாணவர்கள் பயிலும் மாநகராட்சி பள்ளி ஒன்றில் இரண்டே ஆசிரியர்கள் பணியில் இருப்பதாக மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவை, ஜனவரி 19

கோவையில் 98 மாணவர்கள் பயிலும் மாநகராட்சி பள்ளி ஒன்றில் இரண்டே ஆசிரியர்கள் பணியில் இருப்பதாக மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவை கரும்புக்கடையை அடுத்த சாரமேடு பகுதியில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1967-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 98 மாணவர்கள் படித்து வருகின்றனர். தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பாடங்கள் கற்பிக்கும் வாயிலாக இப்பள்ளி தொடங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த பள்ளியில் தலைமையாசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் என மொத்தமாகவே இரண்டு பேர் மட்டுமே பணியாற்றி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.



இது குறித்து மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவரான மோகனா என்பவர் கூறுகையில், "98 மாணவர்கள் பயிலும் பள்ளியில் மாநகராட்சி பள்ளியில் இரண்டே ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். தலைமையாசிரியர் பணி நிமித்தம் காரணமாக வெளியே சென்றுவிட்டால் ஒரேஒரு ஆசிரியர் மொத்த பள்ளியையும் நிர்வகிக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், இப்பள்ளியில் பிரத்தியேகமான சமையல் அறை இல்லை. இதனால், படிக்கட்டுகளின் கீழ் தான் சத்துணவு தயாரிக்கப்படுகிறது.

சிலை வைப்பதற்கும், விழா கொண்டாடுவதற்கும் ஆளும் அரசு பணத்தை செலவிட்டு வருகிறது. ஆனால், மாணவ, மாணவிகளின் வாழ்வுக்கு அடித்தளம் அமைக்கும் கல்விக்கு எந்த நலனையும் செய்ய தவறிவிட்டது.

எனவே, மாணவர்களின் நலன் கருதி உடனடியாக ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...