டெல்லியில் மர்மமான முறையில் மரணம் அடைந்த திருப்பூரை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் சரத் பிரபு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
திருப்பூர், ஜனவரி 19
டெல்லியில் மர்மமான முறையில் மரணம் அடைந்த திருப்பூரை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் சரத் பிரபு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக நேற்று இரவு திருப்பூருக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலை அமைச்சர் உடுமலை ராதாகிருக்ஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.சாசன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர் பாரப்பாளையத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் சரத் பிரபு டெல்லியில் உள்ள யு.சி.எம்.எஸ் கல்லூரில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் பின்னர் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பெற்றோரிடம் நேற்று ஒப்படைத்தனர். டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை கொண்டுவரப்பட்டு பின்னர் திருப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டது. அதன் பின் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இதனிடையே மருத்துவ மாணவரின் உடலுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருக்ஷ்ணன் மற்றும் ஜி.கே வாசன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில், "மருத்துவமாணவர் சரத்பிரபு மரணம் வேதனையளிக்ககூடியது. நல்லதொரு சிறந்த மருத்துவ மாணவரை இழந்துள்ளோம்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் சொல்லி அனுப்பியுள்ளார் அதன்படி அவர்களுக்கான தேவைகளை அரசு செய்யும் சரத்பிரபுவின் மரணம் குறித்து அவரது தந்தையார் பல்வேறு சந்தேகங்களை சொல்லியுள்ளார். அதனை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று சம்பந்தப்பட்ட துறையிடம் முறையிட்டு அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
ஜி.கே.வாசன் கூறுகையில், "தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஏற்கனவே திருப்பூர் மாணவர் அனைவரும் சரவணன் மரணத்தில் விசாரணைக்கு பல ஏஜென்சிகள் ஒத்துழைப்பு தரவில்லை என அவரது தந்தையே தெரிவித்துள்ளார். சரத்பிரபு விசயத்தில் அதே நிலை ஏற்பட்டு விடக்கூடாது.
உடனடியாக வெளிமாநிலங்களில் பயிலும் மாணவர்களின் கணக்கெடுப்பை நடத்தி அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.
வெளிமாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களுக்காக தமிழக அரசு அந்தந்த மாநிலங்களில் ஆலோசனை மையம் அமைக்க வேண்டும்.
கடந்த முறை சரவணன் வழக்கில் விசாரனை காலம் தாழ்ந்து அமைந்தது இன்னும் மரணத்தின் மீதான சந்தேகத்தை அதிகரிக்கிறது" என்றார்.
டெல்லியில் மர்மமான முறையில் மரணம் அடைந்த திருப்பூரை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் சரத் பிரபு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக நேற்று இரவு திருப்பூருக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலை அமைச்சர் உடுமலை ராதாகிருக்ஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.சாசன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர் பாரப்பாளையத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் சரத் பிரபு டெல்லியில் உள்ள யு.சி.எம்.எஸ் கல்லூரில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் பின்னர் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பெற்றோரிடம் நேற்று ஒப்படைத்தனர். டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை கொண்டுவரப்பட்டு பின்னர் திருப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டது. அதன் பின் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இதனிடையே மருத்துவ மாணவரின் உடலுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருக்ஷ்ணன் மற்றும் ஜி.கே வாசன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில், "மருத்துவமாணவர் சரத்பிரபு மரணம் வேதனையளிக்ககூடியது. நல்லதொரு சிறந்த மருத்துவ மாணவரை இழந்துள்ளோம்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் சொல்லி அனுப்பியுள்ளார் அதன்படி அவர்களுக்கான தேவைகளை அரசு செய்யும் சரத்பிரபுவின் மரணம் குறித்து அவரது தந்தையார் பல்வேறு சந்தேகங்களை சொல்லியுள்ளார். அதனை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று சம்பந்தப்பட்ட துறையிடம் முறையிட்டு அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
ஜி.கே.வாசன் கூறுகையில், "தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஏற்கனவே திருப்பூர் மாணவர் அனைவரும் சரவணன் மரணத்தில் விசாரணைக்கு பல ஏஜென்சிகள் ஒத்துழைப்பு தரவில்லை என அவரது தந்தையே தெரிவித்துள்ளார். சரத்பிரபு விசயத்தில் அதே நிலை ஏற்பட்டு விடக்கூடாது.
உடனடியாக வெளிமாநிலங்களில் பயிலும் மாணவர்களின் கணக்கெடுப்பை நடத்தி அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.
வெளிமாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களுக்காக தமிழக அரசு அந்தந்த மாநிலங்களில் ஆலோசனை மையம் அமைக்க வேண்டும்.
கடந்த முறை சரவணன் வழக்கில் விசாரனை காலம் தாழ்ந்து அமைந்தது இன்னும் மரணத்தின் மீதான சந்தேகத்தை அதிகரிக்கிறது" என்றார்.