சரத்பிரபு உடல் அடக்கம் செய்யப்பட்டது; தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - ஜி.கே. வாசன்

டெல்லியில் மர்மமான முறையில் மரணம் அடைந்த திருப்பூரை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் சரத் பிரபு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

திருப்பூர், ஜனவரி 19

டெல்லியில் மர்மமான முறையில் மரணம் அடைந்த திருப்பூரை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் சரத் பிரபு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக நேற்று இரவு திருப்பூருக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலை அமைச்சர் உடுமலை ராதாகிருக்ஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.சாசன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர் பாரப்பாளையத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் சரத் பிரபு டெல்லியில் உள்ள யு.சி.எம்.எஸ் கல்லூரில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். 

இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் பின்னர் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பெற்றோரிடம் நேற்று ஒப்படைத்தனர். டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை கொண்டுவரப்பட்டு பின்னர் திருப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டது. அதன் பின் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.



இதனிடையே மருத்துவ மாணவரின் உடலுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருக்ஷ்ணன் மற்றும் ஜி.கே வாசன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில், "மருத்துவமாணவர் சரத்பிரபு மரணம் வேதனையளிக்ககூடியது. நல்லதொரு சிறந்த மருத்துவ மாணவரை இழந்துள்ளோம்.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் சொல்லி அனுப்பியுள்ளார் அதன்படி அவர்களுக்கான தேவைகளை அரசு செய்யும் சரத்பிரபுவின் மரணம் குறித்து அவரது தந்தையார் பல்வேறு சந்தேகங்களை சொல்லியுள்ளார். அதனை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று சம்பந்தப்பட்ட துறையிடம் முறையிட்டு அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ஜி.கே.வாசன் கூறுகையில், "தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஏற்கனவே திருப்பூர் மாணவர் அனைவரும் சரவணன் மரணத்தில் விசாரணைக்கு பல ஏஜென்சிகள் ஒத்துழைப்பு தரவில்லை என அவரது தந்தையே தெரிவித்துள்ளார். சரத்பிரபு விசயத்தில் அதே நிலை ஏற்பட்டு விடக்கூடாது.

உடனடியாக வெளிமாநிலங்களில் பயிலும் மாணவர்களின் கணக்கெடுப்பை நடத்தி அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.

வெளிமாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களுக்காக தமிழக அரசு அந்தந்த மாநிலங்களில் ஆலோசனை மையம் அமைக்க வேண்டும்.

கடந்த முறை சரவணன் வழக்கில் விசாரனை காலம் தாழ்ந்து அமைந்தது இன்னும் மரணத்தின் மீதான சந்தேகத்தை அதிகரிக்கிறது" என்றார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...