1.5 கிலோ எடையுள்ள போலி தங்க நகைகளை விற்க முயன்ற இருவர் கைது

கோவையில் 1.5 கிலோ எடையுள்ள போலி தங்க நகைகளை விற்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை, ஜனவரி 18 

கோவையில் 1.5 கிலோ எடையுள்ள போலி தங்க நகைகளை விற்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை சலீவன் வீதியை சேர்ந்தவர் ரவி (54). இவரிடம் மைசூரைச் சேர்ந்த இருவர் தங்களுக்கு தங்கப் புதையல் கிடைத்திருப்பதாகவும், ரூ.30 லட்சம் கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினர். 

இதை தொடர்ந்து, ரவி அவர்களிடம் நகையை காண்பிக்குமாறு கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து,

 நேற்று காலை காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் அருகே வந்த அவர்கள் ரவியிடம் 1.5 கிலோ எடையுள்ள நகைகளை காண்பித்தனர். 

அப்போது அவை தங்கமுலாம் பூசப்பட்ட கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது. 

இது தொடர்பாக அவர் காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும், மைசூர் பகுதியை சேர்ந்த சத்ருஹான் (30), கவுரி (45) என்பதும்,  1.5 கிலோ எடையுள்ள போலி தங்க நகைகளை விற்க முயன்றதும் தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து,  வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...