புற்றுநோய் சிகிச்சைக்கு இனி சென்னை செல்ல தேவையில்லை: கோவை அரசு மருத்துவமனையிலேயே புற்றுநோய் மையம் தொடக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இன்று மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 17

கோவை அரசு மருத்துவமனையில் இன்று மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இம்மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைத் துறை செயல்பட்டு வருகிறது. இங்கு 40-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை தினங்களில் நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்

வாரந்தோறும் திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வெளி நோயாளிகளுக்கான புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறைக்கு பிரத்தியேகமாக மண்டல புற்றுநோய் மையம் கோவை அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. 



இது குறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புற்றுநோய் துறையின் தலைவர் டாக்டர். ஏ. சுரேஷ் வெங்கடாச்சலம் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:-

கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி மதுரை மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தலா ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்ட இந்த திட்டத்தின் முதற்கட்டமாகக் கோவை அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடி செலவில் புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை இன்று காலை அரசு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர். அசோகன் திறந்து வைத்தார். 

இதில் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட மருத்துவ இயந்திரங்கள், ஸ்கேன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட உள்ளன.

நாளை முதல் வெளி நோயாளிகள் பிரிவு புதிய கட்டிடத்தில் நடைபெறும். இங்கு மாணவர்களுக்கான கருத்தரங்க கூடம் மற்றும் அறுவை சிகிச்சை கூடம் ஒன்றும் உள்ளது. படிப்படியாக ஒவ்வொரு வசதியாக அந்த கட்டிடத்தில் மேற்கொள்ளப்படும்.

கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நீலகிரி, திருப்பூர், கரூர் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

இன்னும் 6 மாத காலத்தில் மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் பெற்று இந்த துறை மிகச்சிறப்பாக செயல்படும். இனி புற்றுநோய் அறுவை சிகிச்சையை கோவை அரசு மருத்துவமனையிலேயே செய்து கொள்ள இந்தத் துறை உதவிகரமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...