புற்றுநோய் சிகிச்சைக்கு இனி சென்னை செல்ல தேவையில்லை: கோவை அரசு மருத்துவமனையிலேயே புற்றுநோய் மையம் தொடக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இன்று மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 17

கோவை அரசு மருத்துவமனையில் இன்று மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இம்மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைத் துறை செயல்பட்டு வருகிறது. இங்கு 40-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை தினங்களில் நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்

வாரந்தோறும் திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வெளி நோயாளிகளுக்கான புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறைக்கு பிரத்தியேகமாக மண்டல புற்றுநோய் மையம் கோவை அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. 



இது குறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புற்றுநோய் துறையின் தலைவர் டாக்டர். ஏ. சுரேஷ் வெங்கடாச்சலம் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:-

கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி மதுரை மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தலா ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்ட இந்த திட்டத்தின் முதற்கட்டமாகக் கோவை அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடி செலவில் புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை இன்று காலை அரசு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர். அசோகன் திறந்து வைத்தார். 

இதில் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட மருத்துவ இயந்திரங்கள், ஸ்கேன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட உள்ளன.

நாளை முதல் வெளி நோயாளிகள் பிரிவு புதிய கட்டிடத்தில் நடைபெறும். இங்கு மாணவர்களுக்கான கருத்தரங்க கூடம் மற்றும் அறுவை சிகிச்சை கூடம் ஒன்றும் உள்ளது. படிப்படியாக ஒவ்வொரு வசதியாக அந்த கட்டிடத்தில் மேற்கொள்ளப்படும்.

கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நீலகிரி, திருப்பூர், கரூர் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

இன்னும் 6 மாத காலத்தில் மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் பெற்று இந்த துறை மிகச்சிறப்பாக செயல்படும். இனி புற்றுநோய் அறுவை சிகிச்சையை கோவை அரசு மருத்துவமனையிலேயே செய்து கொள்ள இந்தத் துறை உதவிகரமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...