"என்னை தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்": கோவையில் பாரத் சேனாவைச் சேர்ந்த பெண் பிரமுகர் பரபரப்பு புகார்

வாலிபர்கள் சிலர் தன்னை தற்கொலைக்கு தூண்டும் விதமாக நடந்து கொள்வதாக கூறி பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த பெண் பிரமுகர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.

கோவை, ஜனவரி 17

வாலிபர்கள் சிலர் தன்னை தற்கொலைக்கு தூண்டும் விதமாக நடந்து கொள்வதாக கூறி பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த பெண் பிரமுகர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.



கோவை சங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. அதே பகுதியில் மணிகண்டன் டிரேடர்ஸ் என்ற பெயரில் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த வாரம் 'இந்து அமைப்பில் இருந்து கொண்டு அராஜகம் செய்த பெண்மணி' என்ற பெயரில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், சரஸ்வதி சில வாலிபர்களுடன் சண்டையிடுவதைப் போன்ற காட்சிகள் இருந்தது.

இந்த நிலையில், தன்னைப்பற்றி தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சரஸ்வதி இன்று காலை கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நான் கடந்த 20 ஆண்டுகளாக இரும்பு வியாபாரம் செய்து வருகிறேன். அந்த பகுதியில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டும் சிலர் எண்ணிடம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு வாடகைக்கு சென்று வந்தார்கள். காலப்போக்கில் அவர்களது நடவடிக்கை சரியில்லாத காரணத்தால், நானே சொந்தமாக ஆட்டோ வாங்கினேன். இதனால், கோபம் கொண்ட அவர்கள் என்னை பழி வாங்க நினைத்தனர்.

தினமும் மது அருந்திவிட்டு எனது கடை முன் பாட்டில்களை அடுக்கிவிட்டு செல்கின்றனர். இதை தட்டிக்கேட்ட என்னையும், எனது கணவரையும் தாக்கினர்.

இந்த சம்பவத்தின் போது, நான் கோபம் கொண்டு அவர்களிடம் சண்டையிட்டதை மட்டும் வீடியோவாக சமூக ஊடகங்களில் வெளியிட்டு எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றேன். தொடந்து இதேபோல் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்தால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...