டெல்லி யு.சி.எம்.எஸ் மருத்துவக்கல்லூரி விடுதியில் திருப்பூர் மாணவர் மர்ம மரணம் : போலீஸார் விசாரணை

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் ஜனவரி 17

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வமணி திருப்பூரில் டையிங் மில் வைத்து தொழில் நடத்தி வருகிறார். செல்வமணி - கண்ணம்மாள் தம்பதியினரின் மகன் சரத்பிரபு. இவர் கோவை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை கடந்த 2015-ம் ஆண்டு முடித்தார். அதன்பின் கேரள மாநிலம் திருச்சூரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று கடந்த 2017-ம் ஆண்டு எய்ம்ஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் டெல்லி யு.சி.எம்.எஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து எம்.டி. பொது மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு தனது பெற்றோருடன் பேசிய அவர் இன்று காலை அவரது அறையில் இறந்து கிடந்துள்ளார். இதனைக் கண்ட சக மாணவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, கல்லூரி நிர்வாகத்தினர் காலை 8 மணிக்கு சரத்பிரபு தந்தையை அழைத்து, மகனை மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின் ஒரு மணிநேரம் கழித்து அவர் இறந்துவிட்டாதாக தெரிவித்தனர் என உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரது தந்தை மற்றும் உறவினர்கள் டெல்லிக்கு கிளம்பி சென்றுள்ளனர்.



கடந்த 2016-ம் ஆண்டு எய்ம்ஸில் மேற்படிப்பு பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த சரவணன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், எய்ம்ஸின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரியில் பயின்று வந்த மற்றொரு மருத்துவ மாணவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...