டெல்லியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் ஜனவரி 17
டெல்லியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வமணி திருப்பூரில் டையிங் மில் வைத்து தொழில் நடத்தி வருகிறார். செல்வமணி - கண்ணம்மாள் தம்பதியினரின் மகன் சரத்பிரபு. இவர் கோவை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை கடந்த 2015-ம் ஆண்டு முடித்தார். அதன்பின் கேரள மாநிலம் திருச்சூரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று கடந்த 2017-ம் ஆண்டு எய்ம்ஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் டெல்லி யு.சி.எம்.எஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து எம்.டி. பொது மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு தனது பெற்றோருடன் பேசிய அவர் இன்று காலை அவரது அறையில் இறந்து கிடந்துள்ளார். இதனைக் கண்ட சக மாணவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, கல்லூரி நிர்வாகத்தினர் காலை 8 மணிக்கு சரத்பிரபு தந்தையை அழைத்து, மகனை மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின் ஒரு மணிநேரம் கழித்து அவர் இறந்துவிட்டாதாக தெரிவித்தனர் என உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரது தந்தை மற்றும் உறவினர்கள் டெல்லிக்கு கிளம்பி சென்றுள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு எய்ம்ஸில் மேற்படிப்பு பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த சரவணன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், எய்ம்ஸின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரியில் பயின்று வந்த மற்றொரு மருத்துவ மாணவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வமணி திருப்பூரில் டையிங் மில் வைத்து தொழில் நடத்தி வருகிறார். செல்வமணி - கண்ணம்மாள் தம்பதியினரின் மகன் சரத்பிரபு. இவர் கோவை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை கடந்த 2015-ம் ஆண்டு முடித்தார். அதன்பின் கேரள மாநிலம் திருச்சூரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று கடந்த 2017-ம் ஆண்டு எய்ம்ஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் டெல்லி யு.சி.எம்.எஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து எம்.டி. பொது மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு தனது பெற்றோருடன் பேசிய அவர் இன்று காலை அவரது அறையில் இறந்து கிடந்துள்ளார். இதனைக் கண்ட சக மாணவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, கல்லூரி நிர்வாகத்தினர் காலை 8 மணிக்கு சரத்பிரபு தந்தையை அழைத்து, மகனை மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின் ஒரு மணிநேரம் கழித்து அவர் இறந்துவிட்டாதாக தெரிவித்தனர் என உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரது தந்தை மற்றும் உறவினர்கள் டெல்லிக்கு கிளம்பி சென்றுள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு எய்ம்ஸில் மேற்படிப்பு பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த சரவணன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், எய்ம்ஸின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரியில் பயின்று வந்த மற்றொரு மருத்துவ மாணவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.