டெல்லி யு.சி.எம்.எஸ் மருத்துவக்கல்லூரி விடுதியில் திருப்பூர் மாணவர் மர்ம மரணம் : போலீஸார் விசாரணை

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் ஜனவரி 17

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வமணி திருப்பூரில் டையிங் மில் வைத்து தொழில் நடத்தி வருகிறார். செல்வமணி - கண்ணம்மாள் தம்பதியினரின் மகன் சரத்பிரபு. இவர் கோவை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை கடந்த 2015-ம் ஆண்டு முடித்தார். அதன்பின் கேரள மாநிலம் திருச்சூரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று கடந்த 2017-ம் ஆண்டு எய்ம்ஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் டெல்லி யு.சி.எம்.எஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து எம்.டி. பொது மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு தனது பெற்றோருடன் பேசிய அவர் இன்று காலை அவரது அறையில் இறந்து கிடந்துள்ளார். இதனைக் கண்ட சக மாணவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, கல்லூரி நிர்வாகத்தினர் காலை 8 மணிக்கு சரத்பிரபு தந்தையை அழைத்து, மகனை மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின் ஒரு மணிநேரம் கழித்து அவர் இறந்துவிட்டாதாக தெரிவித்தனர் என உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரது தந்தை மற்றும் உறவினர்கள் டெல்லிக்கு கிளம்பி சென்றுள்ளனர்.



கடந்த 2016-ம் ஆண்டு எய்ம்ஸில் மேற்படிப்பு பயின்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த சரவணன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், எய்ம்ஸின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரியில் பயின்று வந்த மற்றொரு மருத்துவ மாணவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...