கவிஞர் வைரமுத்துவை எதிர்த்து பஜனை பாடிய இந்து அமைப்பினர்

ஆண்டாளை இழிவுப்படுத்தி பேசியதாகக் கூறி கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து கோவையில் இந்து அமைப்புகள் பஜனை பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை, ஜனவரி 17

ஆண்டாளை இழிவுப்படுத்தி பேசியதாகக் கூறி கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து கோவையில் இந்து அமைப்புகள் பஜனை பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆண்டாளை இழிவுபடுத்தி பேசியதாகக் கூறி கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து ஆங்காங்கே பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இந்து மக்கள் கட்சி, ராஷ்டிரிய ஸநாதன சேவா சங்கம் உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



அப்போது திருப்பாபை பாடல்களை பாடியபடி பஜனை நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து தனது கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

இதனிடையே அனுமதியின்றி பஜனை நடத்தக்கூடாது என காவல் துறையினர் தடுத்து நிறுத்த முயன்றதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...