ஆண்டாளை இழிவுப்படுத்தி பேசியதாகக் கூறி கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து கோவையில் இந்து அமைப்புகள் பஜனை பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை, ஜனவரி 17
ஆண்டாளை இழிவுப்படுத்தி பேசியதாகக் கூறி கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து கோவையில் இந்து அமைப்புகள் பஜனை பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டாளை இழிவுபடுத்தி பேசியதாகக் கூறி கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து ஆங்காங்கே பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இந்து மக்கள் கட்சி, ராஷ்டிரிய ஸநாதன சேவா சங்கம் உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது திருப்பாபை பாடல்களை பாடியபடி பஜனை நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து தனது கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
இதனிடையே அனுமதியின்றி பஜனை நடத்தக்கூடாது என காவல் துறையினர் தடுத்து நிறுத்த முயன்றதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆண்டாளை இழிவுப்படுத்தி பேசியதாகக் கூறி கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து கோவையில் இந்து அமைப்புகள் பஜனை பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டாளை இழிவுபடுத்தி பேசியதாகக் கூறி கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து ஆங்காங்கே பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இந்து மக்கள் கட்சி, ராஷ்டிரிய ஸநாதன சேவா சங்கம் உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது திருப்பாபை பாடல்களை பாடியபடி பஜனை நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து தனது கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
இதனிடையே அனுமதியின்றி பஜனை நடத்தக்கூடாது என காவல் துறையினர் தடுத்து நிறுத்த முயன்றதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
