பிளாஸ்டிக் கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கோடப்மந்து கால்வாய் : அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என எதிர்பார்ப்பு

நீலகிரி மாவட்டம் உதகை மையப்பகுதியில் ஓடும் கோடப்மந்து கால்வாயை பிளாஸ்டிக் கழிவுகள் சூழ்ந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் ஃப்ரி (Plastic Free) என்று சொல்லக்கூடிய மாவட்ட நிர்வாகம், கால்வாயை மீட்டெடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்குமா..? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நீலகிரி, ஜனவரி 16

நீலகிரி மாவட்டம் உதகை மையப்பகுதியில் ஓடும் கோடப்மந்து கால்வாயை பிளாஸ்டிக் கழிவுகள் சூழ்ந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் ஃப்ரி (Plastic Free) என்று சொல்லக்கூடிய மாவட்ட நிர்வாகம், கால்வாயை மீட்டெடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்குமா..? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 



சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகையில் தொட்டபெட்டா செல்லும் மேல்கோடப்மந்து பகுதியில் இருந்து நகரின் மையப்பகுதி வழியாக படகு இல்ல ஏரியில் கலக்கிறது கோடப்மந்து கால்வாய். சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்தக் கால்வாய் ஓடுகிறது. இதன் ஓரத்தில் உள்ள வீடுகளில் இருந்தும், சுற்றுலாவிற்கு வரும் பயணிகள் தினந்தோறும் வீசும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் தனியார் விடுதிகள், காட்டேஜ்கள், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இந்தக் கால்வாயில் கலக்கிறது. 



இதனையடுத்து, கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு ரூ. 4.72 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கோடப்மந்து கால்வாய் தூர்வாரப்பட்டது. இந்நிலையில் அவ்வப்போது தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு கோடப்மந்து கால்வாயை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், இன்னும், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் ஆக்கிரமித்துள்ளன. 



கடந்த பல மாதங்களாக வெறும் கண் துடைப்பிற்காக மட்டுமே இந்தக் கால்வாயை தூர்வாரப்பட்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பிளாஸ்டிக் ஃப்ரி (Plastic Free) என்ற திட்டத்தில் தடம்பதித்துள்ள நீலகிரி மாவட்ட நிர்வாகம், பிளாஸ்டிக் கழிவுகளை விரைந்து அகற்றி, கோடப்மந்து கால்வாயை மீட்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது. 

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...