நீலகிரி மாவட்டம் உதகை மையப்பகுதியில் ஓடும் கோடப்மந்து கால்வாயை பிளாஸ்டிக் கழிவுகள் சூழ்ந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் ஃப்ரி (Plastic Free) என்று சொல்லக்கூடிய மாவட்ட நிர்வாகம், கால்வாயை மீட்டெடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்குமா..? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நீலகிரி, ஜனவரி 16
நீலகிரி மாவட்டம் உதகை மையப்பகுதியில் ஓடும் கோடப்மந்து கால்வாயை பிளாஸ்டிக் கழிவுகள் சூழ்ந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் ஃப்ரி (Plastic Free) என்று சொல்லக்கூடிய மாவட்ட நிர்வாகம், கால்வாயை மீட்டெடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்குமா..? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகையில் தொட்டபெட்டா செல்லும் மேல்கோடப்மந்து பகுதியில் இருந்து நகரின் மையப்பகுதி வழியாக படகு இல்ல ஏரியில் கலக்கிறது கோடப்மந்து கால்வாய். சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்தக் கால்வாய் ஓடுகிறது. இதன் ஓரத்தில் உள்ள வீடுகளில் இருந்தும், சுற்றுலாவிற்கு வரும் பயணிகள் தினந்தோறும் வீசும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் தனியார் விடுதிகள், காட்டேஜ்கள், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இந்தக் கால்வாயில் கலக்கிறது.

இதனையடுத்து, கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு ரூ. 4.72 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கோடப்மந்து கால்வாய் தூர்வாரப்பட்டது. இந்நிலையில் அவ்வப்போது தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு கோடப்மந்து கால்வாயை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், இன்னும், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் ஆக்கிரமித்துள்ளன.

கடந்த பல மாதங்களாக வெறும் கண் துடைப்பிற்காக மட்டுமே இந்தக் கால்வாயை தூர்வாரப்பட்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பிளாஸ்டிக் ஃப்ரி (Plastic Free) என்ற திட்டத்தில் தடம்பதித்துள்ள நீலகிரி மாவட்ட நிர்வாகம், பிளாஸ்டிக் கழிவுகளை விரைந்து அகற்றி, கோடப்மந்து கால்வாயை மீட்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை மையப்பகுதியில் ஓடும் கோடப்மந்து கால்வாயை பிளாஸ்டிக் கழிவுகள் சூழ்ந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் ஃப்ரி (Plastic Free) என்று சொல்லக்கூடிய மாவட்ட நிர்வாகம், கால்வாயை மீட்டெடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்குமா..? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகையில் தொட்டபெட்டா செல்லும் மேல்கோடப்மந்து பகுதியில் இருந்து நகரின் மையப்பகுதி வழியாக படகு இல்ல ஏரியில் கலக்கிறது கோடப்மந்து கால்வாய். சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்தக் கால்வாய் ஓடுகிறது. இதன் ஓரத்தில் உள்ள வீடுகளில் இருந்தும், சுற்றுலாவிற்கு வரும் பயணிகள் தினந்தோறும் வீசும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் தனியார் விடுதிகள், காட்டேஜ்கள், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இந்தக் கால்வாயில் கலக்கிறது.

இதனையடுத்து, கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு ரூ. 4.72 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கோடப்மந்து கால்வாய் தூர்வாரப்பட்டது. இந்நிலையில் அவ்வப்போது தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு கோடப்மந்து கால்வாயை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், இன்னும், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் ஆக்கிரமித்துள்ளன.

கடந்த பல மாதங்களாக வெறும் கண் துடைப்பிற்காக மட்டுமே இந்தக் கால்வாயை தூர்வாரப்பட்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பிளாஸ்டிக் ஃப்ரி (Plastic Free) என்ற திட்டத்தில் தடம்பதித்துள்ள நீலகிரி மாவட்ட நிர்வாகம், பிளாஸ்டிக் கழிவுகளை விரைந்து அகற்றி, கோடப்மந்து கால்வாயை மீட்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது.