பிளாஸ்டிக் கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கோடப்மந்து கால்வாய் : அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என எதிர்பார்ப்பு

நீலகிரி மாவட்டம் உதகை மையப்பகுதியில் ஓடும் கோடப்மந்து கால்வாயை பிளாஸ்டிக் கழிவுகள் சூழ்ந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் ஃப்ரி (Plastic Free) என்று சொல்லக்கூடிய மாவட்ட நிர்வாகம், கால்வாயை மீட்டெடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்குமா..? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நீலகிரி, ஜனவரி 16

நீலகிரி மாவட்டம் உதகை மையப்பகுதியில் ஓடும் கோடப்மந்து கால்வாயை பிளாஸ்டிக் கழிவுகள் சூழ்ந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் ஃப்ரி (Plastic Free) என்று சொல்லக்கூடிய மாவட்ட நிர்வாகம், கால்வாயை மீட்டெடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்குமா..? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 



சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகையில் தொட்டபெட்டா செல்லும் மேல்கோடப்மந்து பகுதியில் இருந்து நகரின் மையப்பகுதி வழியாக படகு இல்ல ஏரியில் கலக்கிறது கோடப்மந்து கால்வாய். சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்தக் கால்வாய் ஓடுகிறது. இதன் ஓரத்தில் உள்ள வீடுகளில் இருந்தும், சுற்றுலாவிற்கு வரும் பயணிகள் தினந்தோறும் வீசும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் தனியார் விடுதிகள், காட்டேஜ்கள், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இந்தக் கால்வாயில் கலக்கிறது. 



இதனையடுத்து, கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு ரூ. 4.72 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கோடப்மந்து கால்வாய் தூர்வாரப்பட்டது. இந்நிலையில் அவ்வப்போது தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு கோடப்மந்து கால்வாயை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், இன்னும், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் ஆக்கிரமித்துள்ளன. 



கடந்த பல மாதங்களாக வெறும் கண் துடைப்பிற்காக மட்டுமே இந்தக் கால்வாயை தூர்வாரப்பட்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பிளாஸ்டிக் ஃப்ரி (Plastic Free) என்ற திட்டத்தில் தடம்பதித்துள்ள நீலகிரி மாவட்ட நிர்வாகம், பிளாஸ்டிக் கழிவுகளை விரைந்து அகற்றி, கோடப்மந்து கால்வாயை மீட்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது. 

Newsletter

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...