விண்ணைத் தொடும் அளவிற்கு டீசல் விலை கிடுவிடு உயர்வு

டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.65.23-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஜனவரி 16




டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.65.23-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை அதிகரித்து வரும் நிலையில், டீசல், பெட்ரோல் விலை இந்தியாவில் கடுமையாக உயர்ந்துள்ளன. டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு லிட்டர் 61.88 (டெல்லி) ஆக விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது, ரூ.71.27 -க்கு ஒரு லிட்டர் விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் 2014-க்கு பிறகு, பெட்ரோல் விலை முதல்முறையாக இந்த விலையை எட்டியுள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் இன்று பெட்ரோல் விலை 9 காசுகள் அதிகரித்தது. டீசல் விலை லிட்டருக்கு 14 முதல் 16 காசுகள் வரை அதிகரித்துள்ளது. தற்போது பெட்ரோல், சென்னையில் ஒரு லிட்டர் ரூ. 73.89 காசுகளாகவும், கொல்கத்தாவில் ரூ.74-ஆகவும், மும்பையில் ரூ. 79.15-க்கும் விற்கப்படுகின்றன. டீசல் விலை கொல்கத்தாவில் லிட்டருக்கு ரூ. 64.54 ஆகவும், மும்பையில் ரூ.65.9 ஆகவும், சென்னையில் ரூ. 65.23 -க்கும் விற்கப்படுகின்றன. 

இந்த கிடுகிடு விலை உயர்வால் வாகன ஓட்டிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணைய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் தினமும் மாற்றியமைத்து வருகிறது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...