பத்மாவத் திரைப்படத்திற்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

பத்மாவதி திரைப்படத்திற்கு தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும் என ராஷ்ட்ரிய சத்ரிய மகா சபா சமஜியோதன் சமிதியின் தேசிய தலைவர் ராம் அனுஜ்சிங் வலியுறுத்தியுள்ளார்.

கோவை, ஜனவரி 16 

பத்மாவதி திரைப்படத்திற்கு தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும் என ராஷ்ட்ரிய சத்ரிய மகா சபா சமஜியோதன் சமிதியின் தேசிய தலைவர் ராம் அனுஜ்சிங் வலியுறுத்தியுள்ளார். 

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது, பத்மாவதி திரைப்படம் ஜனவரி 25 ஆம் தேதி வெளியிட உள்ள நிலையில், அந்தப் படத்தை பெயரை பத்மாவத் எனப் பெயர் மாற்றம் செய்து காட்சிகள் ஏதும் நீக்காமல் வெளியிடப்பட்ட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பத்மாவத் படத்தை திரையிட இந்திய அரசு தடை விதிக்க வேண்டும். இந்தப் படத்தில் வரும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காமல் படத்தின் பெயரை மட்டும் மாற்றியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. 

இந்திய தணிக்கைத் துறையின் தலைவர் பிரசன் ஜோஷி, மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அலட்சியப்படுத்தும் வகையில் அவருக்கு அளிக்கப்படும் அழுத்தம் காரணமாக இந்தப் படத்தை திரையிட அனுமதி அளிக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தை ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மாநில அரசுகள் படத்தை தடை விதித்தது போல தமிழகத்திலும் இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும். இது குறித்து தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன். தடை விதிக்காவிடில் அடுத்தகட்டப் போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும். படத்தை வெளியிட விட மாட்டோம். இந்தியா முழுவதும் உள்ள முதலமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளேன். என்றார். 

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...