பத்மாவதி திரைப்படத்திற்கு தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும் என ராஷ்ட்ரிய சத்ரிய மகா சபா சமஜியோதன் சமிதியின் தேசிய தலைவர் ராம் அனுஜ்சிங் வலியுறுத்தியுள்ளார்.
கோவை, ஜனவரி 16
பத்மாவதி திரைப்படத்திற்கு தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும் என ராஷ்ட்ரிய சத்ரிய மகா சபா சமஜியோதன் சமிதியின் தேசிய தலைவர் ராம் அனுஜ்சிங் வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது, பத்மாவதி திரைப்படம் ஜனவரி 25 ஆம் தேதி வெளியிட உள்ள நிலையில், அந்தப் படத்தை பெயரை பத்மாவத் எனப் பெயர் மாற்றம் செய்து காட்சிகள் ஏதும் நீக்காமல் வெளியிடப்பட்ட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பத்மாவத் படத்தை திரையிட இந்திய அரசு தடை விதிக்க வேண்டும். இந்தப் படத்தில் வரும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காமல் படத்தின் பெயரை மட்டும் மாற்றியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்திய தணிக்கைத் துறையின் தலைவர் பிரசன் ஜோஷி, மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அலட்சியப்படுத்தும் வகையில் அவருக்கு அளிக்கப்படும் அழுத்தம் காரணமாக இந்தப் படத்தை திரையிட அனுமதி அளிக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தை ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மாநில அரசுகள் படத்தை தடை விதித்தது போல தமிழகத்திலும் இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும். இது குறித்து தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன். தடை விதிக்காவிடில் அடுத்தகட்டப் போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும். படத்தை வெளியிட விட மாட்டோம். இந்தியா முழுவதும் உள்ள முதலமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளேன். என்றார்.
பத்மாவதி திரைப்படத்திற்கு தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும் என ராஷ்ட்ரிய சத்ரிய மகா சபா சமஜியோதன் சமிதியின் தேசிய தலைவர் ராம் அனுஜ்சிங் வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது, பத்மாவதி திரைப்படம் ஜனவரி 25 ஆம் தேதி வெளியிட உள்ள நிலையில், அந்தப் படத்தை பெயரை பத்மாவத் எனப் பெயர் மாற்றம் செய்து காட்சிகள் ஏதும் நீக்காமல் வெளியிடப்பட்ட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பத்மாவத் படத்தை திரையிட இந்திய அரசு தடை விதிக்க வேண்டும். இந்தப் படத்தில் வரும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காமல் படத்தின் பெயரை மட்டும் மாற்றியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்திய தணிக்கைத் துறையின் தலைவர் பிரசன் ஜோஷி, மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அலட்சியப்படுத்தும் வகையில் அவருக்கு அளிக்கப்படும் அழுத்தம் காரணமாக இந்தப் படத்தை திரையிட அனுமதி அளிக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தை ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மாநில அரசுகள் படத்தை தடை விதித்தது போல தமிழகத்திலும் இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும். இது குறித்து தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன். தடை விதிக்காவிடில் அடுத்தகட்டப் போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும். படத்தை வெளியிட விட மாட்டோம். இந்தியா முழுவதும் உள்ள முதலமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளேன். என்றார்.