நீலகிரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ”சுற்றுலா பொங்கல்”

தமிழகத்தின் தலைசிறந்த சுற்றுலா மாவட்டமாக திகழும் நீலகிரியில் சுற்றுலா பயணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலாப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

நீலகிரி, ஜனவரி 16

தமிழகத்தின் தலைசிறந்த சுற்றுலா மாவட்டமாக திகழும் நீலகிரியில் சுற்றுலா பயணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலாப் பொங்கல் கொண்டாடப்பட்டது. 

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பல்வேறு காலகட்டங்களில் வரும் பண்டிகை மற்றும் முக்கிய விழாக் காலங்களின் போது சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன் ஒருகட்டமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நீலகிரி மாவட்டம் உதகையில் காணும் பொங்கல் தினமான இன்று படகு இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



இந்த விழாவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பங்கேற்று குத்து விளக்கேற்றித் துவக்கி வைத்தார். மேலும், கரும்பு, பொங்கல் வைத்து வழிபாடுகள் செய்து சுற்றுலா பயணிகளுக்கு வழங்கினார். இதில், நீலகிரி மாவட்ட பழங்குடியினரான கோத்தர் இன மக்கள் தங்களது பராம்பரிய நடனமாடினர். இதுதவிர தமிழர்களின் பாரம்பரிய கலையான தப்பாட்டம் ஆடி சுற்றுலா பயணிகளை மகிழ்வித்தனர். இதனைச் சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வத்தோடு கண்டு ரசித்தனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...